அபாயம் அபாயம்
அபாயம் அபாயம்
கற்பனை கதை
1876,லண்டன்
அந்த காட்டு பகுதியில் மாலை மங்கும் நேரத்தில் காட்டு மிருகங்கள் அனைத்தும் தங்கள் வாழ்விடங்களுக்கு ஓடின.
வழியில் அந்த மிருகங்கள் ஓடியதற்கான அடையாளங்கள் நிறையவே இருந்தன.
அந்த மிருகங்கள் தாவர உண்ணியோ,மாமிச உண்ணியோ அந்த காட்டில் அதற்கு புலப்படும் மிருகங்களுக்கு பயந்து ஒளிந்தன.
இதுவரை பல காட்டு மிருகங்கள் அந்த மர்மமான விஷயத்துக்கு பலி ஆகி கொண்டு வந்தன.
அதை அந்த காடு இருக்கும் இடத்தை நிர்வகிக்கும் அரசின் பிரதிநிதிகளுக்கு கவலையை அளித்தன.
பிரதிநிதிகள் இந்த மர்மத்தை உடைத்து மக்களின் பயத்தை நீக்க விசாரணை அதிகாரிகளிடம் இதை பற்றி கூறி யார் அங்கு செல்கிறீர்கள் என கேட்க ஐந்து அதிகாரிகள் கை உயர்த்தினர்.
ஆனால் பிரதிநிதிகளுக்கு இத்தனை அதிகாரிகளை காட்டிற்குள் அனுப்ப விருப்பம் இல்லை.
ஒரே ஒருவர் உயிரை பற்றி கவலைப்படாமல் அங்கு செல்ல தயாராக இருந்தால் முன் வரலாம் என கூற சார்லஸ் கையை உயர்த்தி விட்டு பின் எழுந்து நின்றான்.
பிரதிநிதிகள் தலையசைத்து பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர்.
சார்லஸ் தனது வளர்ப்பு பிராணி பிக்கோ எனும் நாயையும் உடன் அழைத்து கொண்டு நதி வழியாக அந்த காட்டை அடைய முடிவு செய்து படகுக்கு ஏற்பாடு செய்து இருந்தான்.
படகு வலித்து காட்டை அடைந்த சார்லஸ் அந்த காலை நேரத்தில் படகை கரையில் நிறுத்தி அங்கு இருந்த ஒரு மரத்தில் கட்டினான்.
பிக்கோ படகில் இருந்து குதித்து அமைதியாக காட்டிற்குள் நடந்து சென்றது.
சார்லஸ் தனது கையில் ஒரு கத்தியை எடுத்து கொண்டு பிக்கோ பின்னே நடந்தா சென்றான்.
பிக்கோ ஒரு இடத்தில் காலால் கோடிட்டு காட்ட சார்லஸ் தனது கையால் அந்த இடத்தை தோண்ட ஆரம்பித்தான்.
அங்கு புதைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு அணில் அவனை கடிக்க விரைந்து குதிக்க சார்லஸ் தரையில் இருந்த கத்தியை எடுத்து அதை நோக்கி எறிந்தான்.
கத்தி பாய்ந்த அணில் சிறிது தூரம் பறந்து சென்று கீழே விழுந்தது.
அந்த அணில் அதனுடைய உடலில் வித்தியாசமான காயங்களுடன் இருந்ததை சார்லஸ் கவனித்தான்.
சார்லஸ் இன்னும் சிறிது தூரம் காட்டிற்குள் நடந்து சென்றால் அங்கு ஒரு எரிக்கல் விழுந்து ஏற்பட்ட பள்ளமும் அது சுற்றி ஒரு வகையான தாவரம் வளர்ந்து இருந்ததையும் கவனித்து தனது கண்ணாடி குடுவையில் அந்த தாவரத்தின் சிறு பகுதியை துண்டித்து எடுத்து அடைத்தான்.
ஆனால் பிக்கோ அந்த தாவரத்தை உண்டு இருந்தது.
அன்று இரவு வீட்டிற்கு வரும் சார்லஸ் ஆதாரங்களை தனது ரகசிய இடத்தில் பூட்டி வைத்து விட்டு திரும்ப சார்லஸ் உடல் மீது வித்தியாசமான காயத்துடன் அவன் மீது பாய வர அவன் ஒடி சென்று ஒரு அறைக்குள் நுழைந்து கதவை சார்த்தி கொண்டு பிரதிநிதி ஒருவருக்கு டெலிபோனில் அழைத்து அபாயம் அபாயம் என சொல்லி முடிக்க கதவை உடைத்து கொண்டு உள்ளே வந்த பிக்கோ அவனை கீழே தள்ளி கடித்து உண்ண ஆரம்பித்தது.
