வஸ்திரதானம்
வஸ்திரதானம்
கோவில் கதவுகள்
சார்த்தியதால் நடைபாதை
துணி வியாபாரிகள் முகத்தில்
உலக மாற்றம் எண்ணி
கவலைரேகைகள்!
உடையின்றி மழையில்
நனைந்த பிச்சைக்காரர்களின்
குரலால் ஈர்க்கப்பட்ட
நடைபாதை வியாபாரிகள்
மானம் காக்க உடைகளை
தானம் செய்ய
கொரானா ஒழிந்து
கோவில் கதவுகள் திறந்து
திரையரங்கங்களும் மால்களும்
மூடப்பட்டன!