வரம்
வரம்
என் உறக்கம் கலைத்த உன் நினைவு
ஓர் ஆண்டில் மறைந்திடுமா!
நீ இருக்கும் ஓர் நொடியும்
உள் உயிரும் உருக்கிடுமே!
உன் குரலின் ஓசை
என் காதில் என்றும் ஒலித்திடுமே!
என் கண்கள் உனைக் காண
வரம் கேட்டு தவித்திடுமே!
என்று வருவாய் என
ஏக்கம் கொண்ட என்மனம்
இன்று நடக்கும் என்று
நினைவுகளுடன் தினமும் விடியவே!