STORYMIRROR

Manoharan Kesavan

Abstract Inspirational

3  

Manoharan Kesavan

Abstract Inspirational

விதை

விதை

1 min
242

உள்ளம் வகுத்த வகையல்லால் – வாழ்க்கை

உயர்வு என்பது ஏதிங்கே?

கள்ளம் கழிந்த மனதல்லால் – உடல் மன

கழிவுகள் நீங்குவது ஏதிங்கே ?


பள்ளம்... வகுத்த பாதை அல்ல... முயன்றால்

சீராகாதோ எதுவும் வாழ்வில்?

வெள்ளத் தனைய மலர்நீட்டம்... மாந்தர்

எண்ணத் தனைய வாழ்வொக்கும்...


அறிஞர் சொன்ன அறவுரை இதுவாகும்... அறிந்து

தெளிந்து நடந்தால் வாழ்க்கை நலமாகும்!

அறிவோம்... ஆராய்வோம்.. எண்ணமதை...

எண்ணத்தால் விதைத்திடுவோம் புதிய விதை!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract