உடைய விடு மனதை
உடைய விடு மனதை
1 min
157
சோகம் அப்படித்தான்
கண்ணீரை இறைத்துக் கொட்டும்
மனநிறைவைத் தூர்வாரும்
இமயத்தை அழுத்திவைக்கும்
மூச்சுக்கு முலாம் பூசும்
இருத்தலை இல்லாமலாக்கும்
வெற்றிடமாய்க் கிடக்கையில்
திடீரென ஒரு நாள்
மெய் ஞானம் தெளித்துவிடும்
முளைத்துவரும் துளிர் ஒன்றை
வெளிச்சத்தில் படரவிடும்
பின் காடாகி மழையாகி
எல்லாமும் நிறையவிடும்
அவ்வப்போது
உடைய விடு மனதை
காலம் தன்னை
புதுப்பித்துக்கொண்டே
இருக்கிறது
பழங்கட்டிடம்
வாழ்ந்த கதை சொல்லும்
புதியதோ
வாழும் வழி சொல்லும்