STORYMIRROR

Ravivarman Periyasamy

Abstract

3  

Ravivarman Periyasamy

Abstract

உழுதுண்பவன்

உழுதுண்பவன்

1 min
229

கலப்பையும் பேசும் களமும் பேசும் 

களைப்பில்லாமல் 

இந்த உலகில் எவனும் இல்லை  

உன் உழைப்பில்லாமல் 

காளைகள் களத்தோடு காதல் பாடும்  

நெல் மணிகளும் உன் காலை முத்தமிடும் 

அனைவரின் தேவையும் உன்னை நோக்கி 

உன் தேவையோ தேவையை நோக்கி

நீ பிடிக்கும் ஏரினால் பிறர் நலன் ஏறும் தன்னலம் கருதா நல்லன்

நீ ஒரு வித்தை இட்டால் நூறாகும் அது இவ்வித்தை அறிந்தவன் எவனோ

நீ ஒருவனே இயற்கையோடு களமாடி வாகை சூடியவன்

பனியும் பணியும் விளையும் மணியும்  மலையும்‌ மழையும் கலையும் கழையும் விலையும் அதனால் ஆகும் விளைவும்      யாவும் உனக்கு செவிமடுக்கும்

நீரின்றி நீர் இருக்கும் உன் கண்ணில் நீயின்றி பயிர் வாடும் மண்ணில்   

நீ எடுக்கும் கலப்பை அது நிறைக்கும் இரைப்பை  

நின் வாழ்வோ பிறை                      அனைவருக்கும் நீயே இறை     

இரையின் இறையே                      இப்புவி மலர்வது உன்னாலே



Rate this content
Log in

Similar tamil poem from Abstract