STORYMIRROR

Ravivarman Periyasamy

Abstract Inspirational

4  

Ravivarman Periyasamy

Abstract Inspirational

பனிக்குடம்

பனிக்குடம்

1 min
210

விந்தையிலும் விந்தை

எந்தைக்கு யான் சேயானது

சிந்தையிலும் இல்லா நொடி

மந்தையில் நான் சேர்ந்தது

குடம் உடைந்து கூட்டிலிருந்து விடுபட்டேன்

கட்டில் நாடும் வரை மந்தையொடு மந்தையாகிவிட்டேன் 

அழியும் செல்வமொன்று கண்டேன்

அழியா செல்வமொன்று கொண்டேன்

வெந்தழலால் வேகாது என்றானே

வெந்தழலால் வெந்தேனே நானே

கொண்டதை விட்டு 

கண்டதை நோக்கினேனே

கிடைத்தது

சுரைக்காய் வயிற்றுக்கு 

சுண்டைக்காய் சோறு

குடம் உடையாமல்

பிண்டம் வராமல் 

அண்டம் போய் சேர

வழி ஏதும் இல்லையோ?

குடத்தில் இருப்பவனே

இல்லை இருப்பவளே 

இல்லை யாராக இருந்தாலும் சரி

வழியே! வெளி வந்து பின் உள் செல்வதே

அதாகப்பட்டது

எது எது எவ்வகையில் ஆயினும்

உனக்கானது உன்னாலே வினையாக்கப்பட்டதாகுமே...



Rate this content
Log in

Similar tamil poem from Abstract