பனிக்குடம்
பனிக்குடம்
விந்தையிலும் விந்தை
எந்தைக்கு யான் சேயானது
சிந்தையிலும் இல்லா நொடி
மந்தையில் நான் சேர்ந்தது
குடம் உடைந்து கூட்டிலிருந்து விடுபட்டேன்
கட்டில் நாடும் வரை மந்தையொடு மந்தையாகிவிட்டேன்
அழியும் செல்வமொன்று கண்டேன்
அழியா செல்வமொன்று கொண்டேன்
வெந்தழலால் வேகாது என்றானே
வெந்தழலால் வெந்தேனே நானே
கொண்டதை விட்டு
கண்டதை நோக்கினேனே
கிடைத்தது
சுரைக்காய் வயிற்றுக்கு
சுண்டைக்காய் சோறு
குடம் உடையாமல்
பிண்டம் வராமல்
அண்டம் போய் சேர
வழி ஏதும் இல்லையோ?
குடத்தில் இருப்பவனே
இல்லை இருப்பவளே
இல்லை யாராக இருந்தாலும் சரி
வழியே! வெளி வந்து பின் உள் செல்வதே
அதாகப்பட்டது
எது எது எவ்வகையில் ஆயினும்
உனக்கானது உன்னாலே வினையாக்கப்பட்டதாகுமே...