நவராத்திரி
நவராத்திரி
ஓருயிர் கீழிருந்து
அடுக்கி மேலே
ஏற்றிய படிக்கட்டுகள்
ஆறறிவுயிரில் ஆறாம்
படிக்கட்டில் எண்ணி நிற்க
நல்ல மனிதர்கள் ஏழில் வாசம் செய்ய
எட்டில் சான்றோர்கள் அறிவொளி வீச
ஒன்பதில் தேவர்கள் நபி இயேசு
கலைமகள் அலைமகள் மலைமகளோடு
கைகோர்த்து எனைப் பார்த்து
புன்னகைக்க உலகம் முழுவதும்
நவராத்திரியை கொண்டாடியதே!