நிலவே
நிலவே
சீராய் செல்லும் மேகங்களுக்கு இடையே,
பூ பூவாய் மாறிய மேகங்களுக்கு மத்தியில்,
பிறை நிலவாய்,
உனக்கே உரித்தான ஒளியினைக் கொண்டு,
உனக்கான பாதையினை உருவாக்கி தவழ்ந்து செல்கையில்,
மெல்லியதாய் உருவாகும் தென்றல்,
எனை தீண்ட உன்னை ரசிக்கிறேன்,
உன் அழகில் மெய்மறந்து.....