முத்தம்
முத்தம்
காலை துயில் களைய வெய்யோனின் கதிரும் பணித்துளியை முத்தமிட்டே இளைப்பாறும்..
மலருக்கு மலர் தாவிய வண்டும் இதழ் தீண்டாமல் மகரந்தம் சேமிக்குமோ...
மகரந்தம் சேர்க்கவே மதுவந்தியும் வந்தாளோ...
நன்றியை உரைக்க தன் நாவை கொண்டு முத்தமிட்டு செல்லும் ஐந்தறிவு ஜீவன்களும்...
மனிதன் மட்டுமே முத்தத்தில் காமம் சேர்த்தானோ...