STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Abstract

3  

Kalai Selvi Arivalagan

Abstract

மணக்க இயலாத முல்லைகள்

மணக்க இயலாத முல்லைகள்

1 min
11.7K



எழுதி முடிக்கும் முன்

தலைப்பு தந்தது போல

என்னில் எழுந்த உணர்வுகளுக்கு

உருக்கொடுக்க நினைத்தும்

கருவாகாது கருகியதேன்?

நீ என்னைப் பிரிந்தும்

நீங்காத நிழலாய் தொடர்ந்து

என்னில் பரவி நிறைந்துள்ளாய்

மனத்தளவில் என்னை நினைத்து

வெளியுலகில் போலியாய் நடமாட

முதலில் கற்றது நீதானே

மூன்றாம் சாமத்து நிலவாக

நினைவுகள் ஒளி குன்றிடினும்

நீ மீண்டும் மீண்டும் தொடர்கிறாய்

உன் போலி நாடகத்தை

என்னுள் அரங்கேற உதவிடு

உதட்டளவில் இனிமையைப் பரிமாறி

உணர்வுகளை பலியிட இனியும்

உள்ளந்தனில் பலமில்லை.

வசந்தத்தை உணரச் செய்தவனே

இந்தக் கோடையை மீண்டிட

இப்போது தேவை நீ தான்!


Rate this content
Log in

Similar tamil poem from Abstract