மௌனம் பேசும் பாஷைகள்
மௌனம் பேசும் பாஷைகள்
அவளை கடந்து என் கால்கள் மட்டும் செல்கையில்,
கண்கள் நான்கும் விபத்தில் சிக்கிக்கொள்ளும் தருணம்,
அவள் காதுகளில் தஞ்சம் அடைந்த இசையை பிரிக்க மனமில்லாமல்,
'என்ன' என்பது போல் அவள் புருவம் உயர்த்தி கேட்கையில்,
மௌனம் பேசும் பாஷைகளின் அழகை அறிந்துக் கொண்டேனடி..