கோகுலாஷ்டமி
கோகுலாஷ்டமி
அறியாமல் அறிமுகமாகி....
தினமும் பார்த்து ....
பழகாமல் பழகி...
வளரும் போது வாஞ்சை கொண்டு... உறவாடி மகிழ்ந்து
உரையாடி களித்து..
ஆதர்ஷ நண்பனாய்...
கிருஷ்ணன் கோவிலில் தொடங்கி... சென்ற இடமெல்லாம்..
இயல்பாய் பயணித்து.....
இணக்கத்தோடு இருந்து...
எதோ ஒரு இடத்தில் நம்பிக்கை முழுவதுமாய் தகர்ந்து....
உடன் வளர்ந்த உனை விடுத்து ..
வெட்டிச் சென்றாலும்....
கோபம் தணிந்து...
நினைவுகள் படர்ந்து...
எங்கோ ஒரு ஓரத்தில் ஒட்டியே இருக்கிறாய்..
என நிருபிக்கும் தருணமாய் மாறிப்போகிறது உன் ஒவ்வோரு பிறந்த நாளும்..