காதல் மரம்
காதல் மரம்
காதல் சுமக்கும் இதயமென
மரமும் காற்றின் இலயத்தில்
துள்ளாட்டம் போட்டே
உற்சாகமாய் தலையசைத்தாட
காற்றின் ஸ்பரிசம் பட்ட நொடியில்
மெல்ல சிலிர்த்தே மயங்க
அந்தக் காதலின் சாட்சியாய்
நிலவுமே காத்திருக்க -
இந்த தீராக் காதலை காவியமாக்க
ஆங்கோர் கவிஞனும் தனை மறந்தே சொல் மலர்களை தேடித் தேடி
பாமாலை படைக்கிறான் !