இயற்கை ஓவியம்
இயற்கை ஓவியம்
காலை நேரத்து பனிப் புழுதிப்
பரிதி ஒளியில்
குருவிகளின் ஓயாத
சாம கானம்!
உற்சாக மிகுதியில்
இலைகளின் காதல்பாஷை சலசலப்பு
சேடல்பூக்கள் தாளம் போட
எட்டிப்பார்த்த பாதிரி மலர்கள்
ஆற்றில் நீந்திக் களிக்க மீன்களின்
உலாவலில் தன்னை மறந்த
தாமரை மலர்கள் பரதம் ஆடித்தான்
பார்க்கிறது.