STORYMIRROR
இருப்பா...
இருப்பாய் பெண்ணே...
இருப்பாய் பெண்ணே நெருப்பாய்!!
இருப்பாய் பெண்ணே நெருப்பாய்!!
பெண்,
அன்பின் வடிவம்..
ஆதி படிமம்..
பெண்ணால்..
உதிரம் உயிராகும்..
முளையும் பயிராகும்..
பெண்ணின்..
சொல்ல முடியாப் பெருமை..
பொறுக்காத ஆணினம்..
எண்ணிப் படுத்தியது சிறுமை..
அதையும் ஏற்றுக் கொண்டு..
புன்முறுவலோடு புரியவைத்தாய்.. நுந்தன்
சொல்லில் அடங்காப் பொறுமை..
பெண் எனும் பெருஞ்சக்தி..
பின்னிருந்து வழிகாட்டும்..
உள்ளிருந்து ஒளிகூட்டும்..
அன்னையாய்..
அன்னை அனைய ஆருயிராய்..
தோழியாய்.. காதலியாய்..
மகளாய்.. மருமகளாய்..
இல்லத் தலைவியாய்..
இன்னலில் மந்திரியாய்..
இவ்வளவு சுமக்கிறாய் பொறுப்பாய்.. எனினும்,
“இருப்பாய் பெண்ணே நெருப்பாய்”..
உடல் கொண்ட அவயத்திற்கு,
‘மதிப்பெண்கள்’ எதற்கு??
உணர்வு கொண்ட உள்ளமுண்டு,
‘மதி பெண்ணை’ அதற்கு..
பெண்ணிடம்..
அன்பு கொள்!! பண்பு கொள்!!
#பெண்ணினம் ஏற்றுவோம்
#பெண்மனம் போற்றுவோம்
#பெண்மானம் போற்றுவோம்
More tamil poem from Vignesh Swamynathan
Download StoryMirror App