எழுதாத ஒரு கவிதை
எழுதாத ஒரு கவிதை
ஆசைகள் எழுகின்ற போதெல்லாம்
பார்க்கிறேன் - அதில்
உன்னை முழுவதும் இரசிக்கிறேன்
நேரில் வரும்போதெல்லாம்
சிலிர்க்கிறேன் - அந்த
மயக்கத்தில் மாயமாக மறைகிறேன்
உடன் இருக்கும் போதெல்லாம்
கரைகிறேன் - அதில்
உன் மேனிதொட்டு உரைகிறேன்
உறக்கத்தில் இருந்த போதெல்லாம்
black;">காண்கிறேன் - அவை
கலையாமல் இருக்க துடிக்கிறேன்
நினைத்திடும் போதெல்லாம்
மகிழ்கிறேன் - அந்த
சுகத்தை நினைத்து வாழ்கிறேன்
ஆனால்,
எத்தனை எழுதினாலும்
எப்பொழுது எழுதினாலும்
முடியாத கவிதையாய் இருக்கிறாய்
என்னுள்
எழுத முடியாத கவிதையாய் இருக்கிறாய்.......!!!