சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி
பாலடைந்த கிணற்றை
பஞ்சனையாய் கொண்டு
ஊரையே ஊசலாய்
கொண்டு அடிக்கொண்டும்
மென் குரலில்
வண்மையாய்
சுற்றும்
மாந்தர் இனத்தையும்
மென்மனதாய் மாற்றி
தொங்கும் தோட்டங்களை
ஆங்காங்கே கொண்டு
அந்தர கோட்டையிலே
எழில் மிகு
கம்பீரமான ஒய்யார
வாழ்வுனக்கு சிட்டே.
மாந்தரின் வாழ்வது
இன்னல் என்பார்
உன்னை விடவா
என யாவரும்
நினைப்பதில்லை.
அலையிலும் சாவு
வலையிலும் சாவு
என மரனத்தை
ஆங்காங்கே சந்தித்து
ஆனந்தம் காண்கிறாய்.
மென்குரலும்
சிறு உடலும்
வண்ண சிறகும்
கொண்டு
உன் அருமை தெறியாதோருக்கும்
உதவும் உள்ளம் தான் ஏனோ உனக்கு.
நல்நெஞ்சம் கொண்டு
உன்னை காத்திடா
இந்த உலகில்
உதவும் நல்மனம் ஏனோ.