செவிலித்தாய்
செவிலித்தாய்
ஊசியின் வலியும்
தெரியாமல் போனது
மருந்தின் கசப்பும்
மறந்து போனது
புன்னகை முகமாய்
அவள் தருவதால்
மழலையும் அவள்
கண்களுக்கு குழந்தையே
முதியவரும் அவள்
கண்களுக்கு குழந்தையே
தாய்மையை உணரும்
முன்னே அனைவரையும்
தாங்கும் உள்ளம்
வெள்ளை உடை அணிந்த
தெய்வத்தின் பிரதிநிதி
செவிலியர் என்னும் அன்னையே!!
