தொலைதூர காதல்
தொலைதூர காதல்
"மாமா எப்ப வருவ உங்களை பார்க்கனும் மாமா ரொம்ப மிஸ் பன்ற நம்ம குட்டி அதைவிட மிஸ் செய்யராலாம்" என்று தன் மேடிட்ட வயிற்றை தடவி கொண்டே தன் கணவன் மதியழகன் புகைப்படத்தை பார்த்து பேசிக் கொண்டு இருந்தாள் ராதா.
" குட்டி பாருடா அப்பா இன்னும் நமக்கு ஃபோன் செய்யல அப்பாகிட்ட நாம டு விட்டுரலாம் சரியா" என்று சொல்லவும் குட்டி வயிற்றுக்குள் எட்டி உதைக்கவும் ஃபோனில் விடியோ கால் வரவும் சரியாக இருந்தது.
"குட்டி அப்பா காலிங்டா" என்று ஃபோனை எடுத்தால்
பின் கேமரா ஆன் செய்து விட்டு பேசாமல் இருந்தாள்.
"குட்டி அம்மாவ முன் கேமரா ஆன் செய்து விட்டு அப்பாகிட்ட பேச சொல்லுங்கள்" என்றான் மதி.
முன் கேமரா ஆன் செய்துவிட்டு அவன் முகத்தை பார்த்து கொண்டு இருந்தாள் ஒரு துளி கண்ணீர் கன்னத்தில் வழிந்தது
"ராதுமா என்னை பாருடி எப்ப ஃபோன் செய்தாலும் அழுதா என்னால நிம்மதியாக வேலை செய்ய முடியுமா டி பிளிஸ் டி அழுமூஞ்சி என் ராட்சசி அழுகக்கூடாது"
" நானா உங்களை அமெரிக்கா போய் வேலை பார்க்க சொன்ன எனக்கு வசதியாக வாழ ஆசை இல்லை குடிசை வீட்டுள வாழ்ந்தாலும் உங்க அணைப்பில் இருந்து சந்தோஷமாக வாழனும்" அழுதுகொண்டே சொன்னாள்
"ராது அழாத குட்டி இருக்கா உனக்குள்ள"
"ஹ்ம்ம் பொல்லாத அக்கறை" வாய்க்குள் முனுமுனுக்குறாள்
"நான் வேலை பார்குறது யாருக்கு டி"
"எனக்கு தேவை இல்லை"
"ராது உன்கிட்ட பேச ஃபோன் பன்ன சண்டை போட இல்லை"
"நான் உங்ககிட்ட எதிர்பார்க்கப்படுகிறது நீங்க மட்டும் தான் ஐ லவ் யூ லாட் மாமா இந்த டைம்ல ரொம்ப மனசு உங்களை தேடுது மிஸ் யு லாட் மாமா"
"நம்ம குட்டி வரதுக்குள்ள வந்துடுவேன் புரோமிஸ் டி போய் தூங்கு நேரம் ஆச்சி"
"ம்ம் லவ் யூ" சொல்லிட்டு தூங்கினாள்
ஒரு வாரத்திற்கு பிறகு...
மதி ராதுவுக்கு ஃபோன் செய்தான்.
"ராதுமா"
"சொல்லுங்கள் மாமா சாப்டிங்களா"
"உனக்கு ஒரு பார்சல் அனுப்புன வந்துருச்சு போய் வாங்கிகோ மெதுவா போடி"
" ம்ம் சரி"
கதவு திறந்து வெளியே போகிறாள்
" மிஸஸ் ராதா மதியழகன்" குரல் மட்டும் கேக்குது
"மாமா எங்க இருக்கீங்க" கண்ணீர் குளமாக தேங்கி நிற்கிறது
"இங்கே தான்"
ராதா ஓடிப்போய் மதியழகனை கட்டிக்குறாள்
"ராதுமா பார்த்து டி குட்டி இருக்கா உனக்குள்ள"
"லவ் யூ லவ் யூ ஷோ மச் மாமா"
"உன்னை குட்டிய விட பெருசு எனக்கு ஒன்னும் இல்லை டி ராது லவ் யூ பொண்டாட்டி"
தொலைதூர காதல் அழகானது தான்
ஆனால் மிகவும் வலி நிறைந்த ஒன்று
உணர்ந்தவர்களுக்கு புரியும்
சுகமான காதல் வலி.....

