இரவி
இரவி
காதல் -
காலநிபந்தனை இல்லாதது !
நேரம் சரியாக இரவு 10.30
"ஒரே நாள் உனை நான் நிலாவில் பார்த்தது " என்ற பாடல்,
மிதமான குறைவொலியில் சிணுங்கிக்கொண்டிருந்தது.
என்னோடு சேர்ந்து என் வீட்டு சுவர்களும்
கேட்டுக்கொண்டுதான் இருந்தது .
விபரம் தெரிந்த நாட்களிலிருந்தே,
அந்த பாடல் மீது,
எனக்கு ஏதோ ஒரு மயக்கம்.
உதடுகள் - அதிகம் முணுமுணுத்த பாடல் கூட
அதுவாகத்தான் இருக்கும் .
காதல் - பல கற்பனைவாதிகளை உருவாக்கியிருக்கலாம்.
அந்த கற்பனைகள் - அவரவர் காதலை உயர்த்தி பிடித்திருக்கலாம்.
அதே போல் தான் "நாணும் ".
இதுவரை உலக வரலாறுகள் -
கண்ட காதலை விட,
"என் காதல் தான் உயர்வானது", என்ற - காதலர்களின் அதே பண்பு,
எனக்கும் உண்டு .
அந்த "ஒரே நாள் உனை நான் " பாடலோடு சேர்ந்து,
சில நிமிடங்களும் கரைந்து,
காற்றில் கலந்துகொண்டிருந்தது .
நேரம் 10.37 :
மீண்டும் அதே பாடல் வரிகள் –
என் கைபேசி அழைப்பொலியில் !
அவள் தான் !
என் எல்லா உணர்வுகளுக்கும்,
சொந்தம் கொண்டாடுபவள் !
உலகில் ஏராள அழகிகள் உள்ள போதும் –
என் கண்களுக்கு காதலாய் காட்சிப்பட்டவள் !
உலகில் பல்லாயிர அழகிய ஆண்கள் உலாவும் பொழுது –
என்னையும் எல்லையற்று காதலித்தவள் !
அவள் தான் அழைக்கிறாள்
கைபேசி வழியாக !
எங்கள் காதல் நேரம் -
எப்பொழுதும் இந்த இரவுக்கூடாரத்தில் தான் !
என் பெயர் *அவளிடமும்
அவள் பெயர் *என்னிடமும்
அதிகமாய் ரசிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது .
எங்கள் வார்த்தைகளில்,
அதிகஅளவு இடம்பிடித்ததும் எங்கள் "பெயர்கள்" தான் .
வறட்சி இல்லாமல் உச்சரித்தோம்.
உயிர்வரை உச்சரித்தோம் .
இதைவிட யாரும் அழகாய் உச்சரிக்க முடியாதபடி உச்சரித்தோம் .
காதலின் கட்டமைப்புகளோடு உச்சரித்தோம்.
மீண்டும் மீண்டும் எங்கள் பெயருக்கே செவிகொடுத்த
இந்த இரவுக்குக்கூட,
எங்கள் காதலுச்சரிப்பு
பிடித்துப்போயிருக்கத்தான் வேண்டும் .
தலையணையில்தான் தலை வைத்து சாய்ந்திருப்பேன் –
ஆனால் அவள் மடி விழுந்த உணர்வு தரும்,
அந்த அலைபேசி நிமிடங்கள் .
அவளுக்கும் அப்படித்தான் .
தொலைதூரக்காதலில்,
நினைவுகள் தான்
மிக நெருக்கமானவை .
அன்றாட நிகழ்வுகளை அப்படியே ஒப்பிப்பாள் –
அதில், அணுவளவும் தோற்காது அவளழகு .
அவ்வப்போது சில பெருமூச்சுகளும்
நிகழ வாய்ப்புண்டு.
அதைக்கூட - எங்கள் கைப்பேசி ,
அளவை சுருக்காமல் அப்படியே கொண்டுவந்து சேர்க்கும் -
செவிவழியாக மனதிற்குள் .
கொஞ்சக்கேட்ப்பாள் -
கொஞ்சாவிடில் சினமாவாள்.
உலக கவிஞர்களெல்லாம் என்னோடு தோற்றுக்கொண்டிருப்பார்கள் -
அந்த "எங்களிரவில்" !
அளவில்லா கற்பனைகளோடு,
அவளழகை அத்துமீறி
வர்ணித்துக்கொடுத்துக்கொண்டே இருப்பேன் !
சில செல்லமான கண்டிப்புகளும் கொடுப்பாள் !
விடியல் என்பது - இல்லாமல் போகட்டும் என்ற எதிர்பார்ப்பு,
அந்த நேரம் எங்களுக்குள் அடிக்கடி எட்டிப்பார்க்கும் !
எங்கள் குரல் கூட ,
பூனை போல பதுங்கித்தான் ஒலித்துக்கொண்டிருக்கும்.
அவரவர் வீட்டில், எங்கள் "ரகசிய இரவுகள்"
சிறைப்பட்டுவிடக்கூடாது என்பதற்க்காக !
வறண்டு வெடித்த நிலப்பெருக்கில்,
மேகம் மெதுவாய் கரைந்து நீராய் விழுவது போன்ற -
ஓர் சுகம் கிடைக்கும்,
அவள் - குரல் கேட்டால் .
நிஜம் தான் .
முன்பே இவள் அறிமுகம் கிடைத்திருந்தால் –
இவளையே பாடவைத்திருக்கலாம் என்று
திரைக்கவிஞர்கள் கூட எண்ணும் அளவிற்கு –
பாடியவர்களை விட பேரழகாய் பாடுவாள் .
அவளிடம்,
முத்தம் கேட்டு கெஞ்சுவதோடு சேர்த்து,
ஒரு பாடல் பாடவும் கேட்டு கெஞ்சிய நாட்களும் அதிகம் தான் !
சில நேரம் –
எனக்குள் எப்பொழுதும் ஒலிக்கும்
அந்த "ஒரே நாள் உனை நான் " பாடலை பாடுவாள் .
எப்பொழுதும் என் இரவுகள் -
இவளால் தான் அலங்கரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும் .
விடியலை நோக்கி நகரும் நிமிடங்களை –
இரவுகளுக்குள்ளேயே கட்டிவைக்க தெரியாமல்
கவலை கொண்டிருப்போம்.
பேசிக்கொண்டிருக்கும் பொழுதே ......
திடீரென உறங்கிவிடுவேன் .....
ஆனாலும், என்னை - என் பெயரை உச்சரித்துக்கொண்டேயிருப்பாள்.
இப்படி,
என்னிரவெல்லாம் அவள் உச்சரிப்பிலும்,
அவளிரவெல்லாம் என் உச்சரிப்பிலும்தான்
உலர்ந்துகொண்டிருந்தது .
மீண்டும்
மறுநாளிரவை தேடும் பயணத்தில் -
"நாங்களும் எங்கள் காதலும்"
அவள் என் இனிய - "இரவி"