மேகம்
மேகம்
கட்டுடல் காரிகையாய்
கண்களில் புலப்பட்ட அவளை
காரிருள் மறைத்ததோ
தேகம் கருத்திட
அவளின் கண்ணீரால்
செழித்த வயலும் பசுமை உதிர்க்க,
இருளை வெறுத்தேன் நான்...
கண்ணை விட்டு மறைந்த அழகை
இன்னும் பலபேர் மேகமென கூறுகையில்...
நான் மட்டும் தேடுகிறேன்...
மயங்கிய அழகில்
மீண்டும் மயங்க...