STORYMIRROR

Narayanan Neelamegam

Abstract

3  

Narayanan Neelamegam

Abstract

ஏகாந்தம்

ஏகாந்தம்

1 min
11.7K

எல்லாம் இருந்தும் 

ஏதும் இல்லாதது போல் 

தோன்றும் நிலைதான் 

ஏகாந்த நிலை....


தனிமையின் நிலைதான்

நிலையற்ற நிலைதான்  

ஏகாந்த நிலை....   


இவர்கள் எல்லாரும்,   

பெற்றோர் இருந்தும்  

சகோதரர் இருந்தும் 

சகோதரி இருந்தும் 

நண்பர்கள் இருந்தும் 

உறவினர் இருந்தும் 

பக்கத்வர் இருந்தும்

தனிமையில் இருப்பதாய் 

தோன்றுவதே ஏகாந்தம் ........


ஏகாந்த 

பரிணாமங்கள் ..... 

பல ..... !!!

சமூகம் ஏகாந்தம் 

மனதின் ஏகாந்தம்

உணர்ச்சிகளின் ஏகாந்தம்

சுற்றுசூழலின் ஏகாந்தம்


ஏகாந்த 

பரிமாணங்கள் ..... 

சில ..... !!!

சிலர் நிலாஒளியில் ஏகாந்தம் 

சிலர் கார்மேகத்தில் ஏகாந்தம் 

சிலர் அதிகாலையில் ஏகாந்தம்  

சிலர் அந்திமாலையில் ஏகாந்தம்  

சிலர் தியானத்தில் ஏகாந்தம் 

சிலர் மௌனத்தில் ஏகாந்தம்  

சிலர் காதலினால் ஏகாந்தம்  

சிலர் கவலைகளில் ஏகாந்தம்  


இம் மண்ணில் ......!!!

வீழ்ந்த விதைஎல்லாம் 

முளைக்கும் 

மழை நீரின் துணையோடு 


அதைபோல் 

ஏகாந்தமும் எதார்த்தமாய் 

இம் மண்ணில் ......!!!


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract