அத்தியாயத்தின் பகுதி
அத்தியாயத்தின் பகுதி
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
சுருண்டழிந்த பகலில்
வெகுண்டெழுந்த இரவில்
முகிலோடு வான் ஆடிய தாண்டவம்
மனிதன் உணர்ந்திராத அதிசயம்
வெளிச்சத்திற்கோர் இருட்டுண்டு
இருட்டிற்கோர் வெளிச்சமுண்டு
எனக் காட்டிய அதிசயம்
இயற்கை அதிசயம் பல
அதைக் காணும் முன்
இயற்கை எய்தியோர் பலர்
மௌனம் அதன் மொழி
பகை அழிக்க புயலென வீறுகொண்டெழுவது அதன் வழி
இயற்கையின் அத்தியாயம் மனிதன்
இதை உணரா மனிதன்
அத்தியாயத்தின் பகுதி ஆனான்
மா! மனிதன்