அம்மா
அம்மா
அம்மா
அம்மா உன் கை பட்டதுமே நான் சிரித்து போகிறேன் உன்னைத்தவிர ஏது அரவணைப்பு
நீ தரும் உயிர் தேனமுதம் அது தாய்ப்பால் ஆயினும் சரி ஆவின்பால் ஆயினும் சரி
உன் நேசம் எங்களை நேசிக்க வைக்கும்
தொலைதூரத்தில் இருந்தாலும் மனம் திறக்கும்
உன் தாலாட்டு கூட என்னைத் தலையாட்ட வைக்கிறது
நீ அணைக்கும் போது உன் ஸ்பரிசம் வீணையாய் மீட்டது போலிருக்கிறது
அதிலேயே தூக்கமும் வந்துவிடுகிறது
அனைத்தையும் ஒரே இடத்தில் விலையின்றி
வாங்க முடியுமானால் அது தான் அம்மா
அதுதான் உண்மை கடவுள்
அம்மா மூன்று எழுத்துக்கள்
நான் யார் என்று அறியும் முன்னமே
என் குணம் தெரியும் முன்னமே
என்னை நேசித்தவர்
என்னை நேசித்த அம்மா
என்னை நேசித்த அம்மா உண்மை கடவுள்
அம்மா மூன்று எழுத்து கவிதை
என்னை நேசித்த வளம்
மாமணி மகுடம் சூட
ஆராய்ந்து பார்த்தாலும் புரியாத புதிர்
எங்கிருந்து சுரக்கும் இந்த அன்பு
தாயின் மடி சாயும்போது தொலை தூர ஓடிவிடும் தொல்லைகளும்
எ ப்பிறவியில் செய்த புண்ணியமோ
இப்பிறவியில் என் அன்னை
எங்கு தேடியும் கிடைக்காத
ஒரு நிம்மதி கடல்
அம்மாவின் மடிதான்
தாயின் அன்புக்கு ஈடு இணையே கிடையாது
உனக்கு இணையான ஒரு சொல் இல்லை, சொந்த , பந்தமில்லை
முதலில் நான் சொன்ன வார்த்தை, கவிதை, எழுதிய வார்த்தை எல்லாமே அம்மாதான்
எங்கே தன் இதயத்துடிப்பு குழந்தையின் தூக்கம் கலைந்து விடுமோ என்று கவலை கொண்டு இதயத் துடிப்பை அடக்கி ஆள்பவள்
வார்த்தைகளுக்குள் அடங்காத வடிவம்
எல்லாம் அறவே இல்லாத அன்பு ,சுயநலம் , வெறுப்பே இல்லாத இதயம்.
