STORYMIRROR

anuradha nazeer

Inspirational

4  

anuradha nazeer

Inspirational

அம்மா

அம்மா

1 min
155

அம்மா

அம்மா உன் கை பட்டதுமே நான் சிரித்து போகிறேன் உன்னைத்தவிர ஏது அரவணைப்பு


நீ தரும் உயிர் தேனமுதம் அது தாய்ப்பால் ஆயினும் சரி ஆவின்பால் ஆயினும் சரி

உன் நேசம் எங்களை நேசிக்க வைக்கும்

தொலைதூரத்தில் இருந்தாலும் மனம் திறக்கும்

உன் தாலாட்டு கூட என்னைத் தலையாட்ட வைக்கிறது

நீ அணைக்கும் போது உன் ஸ்பரிசம் வீணையாய் மீட்டது போலிருக்கிறது

அதிலேயே தூக்கமும் வந்துவிடுகிறது

அனைத்தையும் ஒரே இடத்தில் விலையின்றி

வாங்க முடியுமானால் அது தான் அம்மா

அதுதான் உண்மை கடவுள்

அம்மா மூன்று எழுத்துக்கள்

நான் யார் என்று அறியும் முன்னமே

என் குணம் தெரியும் முன்னமே

என்னை நேசித்தவர்

என்னை நேசித்த அம்மா


என்னை நேசித்த அம்மா உண்மை கடவுள்

அம்மா மூன்று எழுத்து கவிதை

என்னை நேசித்த வளம்

மாமணி மகுடம் சூட

ஆராய்ந்து பார்த்தாலும் புரியாத புதிர்

எங்கிருந்து சுரக்கும் இந்த அன்பு

தாயின் மடி சாயும்போது தொலை தூர ஓடிவிடும் தொல்லைகளும்

 எ ப்பிறவியில் செய்த புண்ணியமோ

 இப்பிறவியில் என் அன்னை

எங்கு தேடியும் கிடைக்காத

ஒரு நிம்மதி கடல்

அம்மாவின் மடிதான்

தாயின் அன்புக்கு ஈடு இணையே கிடையாது

உனக்கு இணையான ஒரு சொல் இல்லை, சொந்த , பந்தமில்லை

முதலில் நான் சொன்ன வார்த்தை, கவிதை, எழுதிய வார்த்தை எல்லாமே அம்மாதான்


எங்கே தன் இதயத்துடிப்பு குழந்தையின் தூக்கம் கலைந்து விடுமோ என்று கவலை கொண்டு இதயத் துடிப்பை அடக்கி ஆள்பவள்


வார்த்தைகளுக்குள் அடங்காத வடிம் 

எல்லாம் அறவே இல்லாத அன்பு ,சுயநலம் , வெறுப்பே இல்லாத இதயம்.



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational