தாய்வீடு
தாய்வீடு
இனிமையான காலை பொழுது. கதிரவனின் கதிர்கள் இப்புவியில் பட்டு ஒளி வீச தொடங்கியது. சூரியன் பெரிய ஆரஞ்சு பழத்தை போல் காட்சி தந்து கண்களுக்கு குளிர்ச்சி தந்தது.
சென்னை விமான நிலையம்..
அந்த விமான நிலையத்தில் ஸ்விடசர்லாந்திலிருந்து வந்த விமானம் வரவிருக்கும் தகவல் சொல்லப்பட்டது.
அந்த பிரம்மாண்டமான வெள்ளை பளிங்கு போன்ற விமானம் தரையிறங்கபட்டது.
அதிலிருந்து வந்த பரத் மற்றும் ராதிகா அவர்களுக்கென்று காத்திருந்த Hyundai காரில் ஏறிச் சென்றனர்.
அந்த கார் ஒரு பெரிய வீட்டின் முன் நின்றது.
"ரதி எனக்கு ஒரு முக்கியமான வேலை வந்துருச்சு நீ போய் ரெஸ்ட் எடுத்துகோ நான் கொஞ்ச நேரத்தில் வந்துடுவேன் லவ் யூ டார்லிங்" என்று ராதிகாவின் நெற்றியில் இதழ் பதித்துச் சென்றான் பரத்.
"ம்ம் சரி" என்று சிரித்துக்கொண்டே விடைக்கொடுத்தால் பரத்தின் ரதி என்னும் ராதிகா.
ராதிகா அழகில் ரதி போன்றவளே. மென்மையான மனம் கொண்டவள். எல்லாரும் நன்றாக இருக்க வேண்டும் என நினைப்பவள்.
நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் தான் அவளின் குடும்ப சூழல். அவளுக்கு அம்மா அப்பா தம்பி தங்கை என்று உள்ளனர்.அப்பா ஐந்து வருடங்கள் முன்பு இறந்துவிட்டார்.பிறகு குடும்ப பொறுப்பை ராதிகா எடுத்துக் கொண்டால். அவள் வேலை பார்த்த கம்பெனியின் முதலாளி தான் பரத்.
அவளின் அழகு, வேலையில் காட்டும் அக்கறை, தன் குடும்பத்தின் மேல் வைத்துள்ள பாசம் என அவளின் மேல் காதல் வந்ததற்கான காரணங்கள் பல உண்டு.
ஆனால் அவனின் ரதி மறுத்து விட்டாள். பிறகு ஒரு வழியாக திருமணம் செய்தான் அவளின் அம்மாவின் பேசி(கெஞ்சி).
திருமணம் முடிந்தது. பின் ஒரு மாதம் ஸ்விட்சர்லாந்துக்கு தேனிலவு இப்போ வந்திருக்கின்றனர்.
வேலை முடிந்து பரத் வந்தான்.
"என்னங்க"
"சொல்லு ரதி"
"வெளியே போகனும் வரீங்களா"
"ஷாப்பிங் போகணுமா ரதி"
"இல்லங்க அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறீங்களா பிளிஸ் அம்மாவ பாக்கனும் தம்பி தங்கச்சியலாம் பாக்கனும் போல இருக்கு" ன்னு சொல்லும் போதே குரல் தழுதழுத்தது கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது.
"ரதி டோன்ட் க்ரை சரி வா போகலாம்"
ரதி முகத்துல அவ்வளவு சந்தோஷம் "நான் ரெடி போகலாம்"
அவனின் கார் ஒரு சிறு வீட்டின் முன் நின்றது.
அவள் தம்பி தங்கை, "அம்மா அக்கா மாமா வந்துருங்காங்க"ன்னு அவங்களுக்கு ஒரே ஜாலி தான்.
ரதி அம்மா, "வாங்க மாப்பிள்ளை வா ராதிகா" ன்னு ஒரே உபசரிப்பு தான். அப்புறம் ராதிகா வாங்கி வந்தது எல்லாம் குடுத்தால்.
அவளின் வீடு ரொம்ப சின்னது தான். படுக்கை அறை கூட தனியாய் கிடையாது.ஒரு ஹால் மட்டும் தான் அதுவே தான் அவர்களுக்கு வரவேற்பு அறை, படுக்கை அறை, சமையல் அறை எல்லாம்.
ராதிகா தன்னோடு இருந்த ஸ்விட்சர்லாந்து தேனிலவிலும் தன் பெரிய வீட்டிலும் மகிழ்ச்சியாக இருந்தால் தான் ஆனால் இப்போது தான் அவளது முகம் தனிக்கலையாய் ரொம்ப மகிழ்ச்சியாய் இருப்பது போல் இருக்கிறது என்று நினைத்து கொண்டான் பரத்.
ராதிகாவின் அம்மா அவளுக்கு பிடித்ததையெல்லாம் செய்து கொடுத்தார்.
அதைக்கொண்டு ராதிகாவின் மனம் நெகிழ்ந்தது.சந்தோஷத்தில் ஆனந்த கண்ணீர் வந்தது யாருக்கும் தெரியாமல் துடைத்து கொண்டாள்.
"என் புருஷன் என்ன தான் கோடிஸ்வரனாய் இருந்தாலும் அவ்வளவு பெரிய வீடு தேனிலவுக்கு ஸ்விட்சர்லாந்து ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் சாப்பாடுன்னு இருந்தாலும் அது எனக்கு பெருசா தெரியல ஆனால் என் அம்மா வீட்டில் இருந்தால் மனசுக்கு ஆறுதலாக இருக்கிறது. தம்பி தங்கை கூட நேரம் போனதே தெரியவில்லை. அம்மா கையால ஒரு வாய் சாப்பிட்டாலும் வயிறும் மனசும் நிறைஞ்சு போகுது" ன்னு மனதில் நினைத்து கொண்டாள் ராதிகா.
இரவு உணவை அங்கேயே முடித்துக்கொண்டு சென்றுவிட்டனர் தங்கள் வீட்டிற்கு.
தாய்வீடு குடிசையானலும்
அந்த வீட்டில் பிறந்த பெண்ணிற்கு
அது அரண்மனையே.....

