மதுமிதா வேலைக்கு போகிறாள்
மதுமிதா வேலைக்கு போகிறாள்
காலை லேட் ஆக எழுந்திருக்கும் பழக்கம் மதுமிதாவுக்கு இல்லை. அன்றோடு 6 மாதங்கள் ஆகியிருந்தது மதுமிதா இன்ஜினியரிங் முடித்து. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புதான் முடித்திருந்தாள் . அப்பா ரிடையர்ட் பாங்க் மேனேஜர்.அம்மா ஹவுஸ்வொய்ஃப் . ஒரே பெண் என்பதால் இப்போதே கல்யாணம் செய்து கொள்ள நிறைய பேர் கேட்டிருந்தார்கள். அவளுக்கு போதுமான நாலேட்ஜ் இருந்தது ஆனால் ரெஃபரென்ஸ் இருக்கவில்லை. அதாவது சிபாரிசு செய்ய பெரிய நிறுவனங்களில் ஆட்கள் இல்லை. இப்படியே 6 மாதங்கள் ஓடி விட்டது. அம்மா காபி என்றாள் . நீயே போய் எடுத்துக்கோடி. சின்ன சின்ன வேலை செய்யலேன்னா அப்புறம் வெயிட் போட்டுடுவ.. என்றாள் . சரிம்மா ஆரம்பிக்காதே என்று சொல்லிவிட்டு காபியை பருகியவாறே பால்கனியில் நின்றவாறு வேடிக்கை பார்த்தாள். எல்லோரும் எவ்வளவு பிஸி ஆக இருக்கிறார்கள். ஸ்கூல், காலேஜ் போகிறவர்கள் ,அலுவலகம் போகிறவர்கள் எல்லோரையும் வியப்புடன் புதிதாக பார்ப்பவள் போல பார்த்துக்கொண்டிருந்தாள்.
எல்லோரையும் போலத்தான் அவளும் ஒரு பெண்ணாக பல இடைஞ்சல்களை கடந்து வந்திருந்தாள் . படிப்பு முடிவதற்குள் அவளை காதலிக்க எத்தனை பேர் முயற்சித்தார்கள். அவள் முதல் ரேங்க்கில் பாஸ் பண்ணியிருந்தாள் . அவளுக்கு சொந்தமாக கம்பனி நடத்த விருப்பம் அவள் அப்பா பாங்க் மேனேஜர்ஆக இருந்தவர் என்பதால் அது கூட சுலபம் தான். எக்ஸ்பீரியன்ஸ் வேண்டும் அதை நினைத்து தான் அவள் மனம் கவலை அடைந்தது. சிறிது நேரம் டிவி பார்த்தாள். ஸ்வேதாவுக்கு வேலை கிடைத்து விட்டது அவளும் இவளும் ஒரே பேச் தான். இன்று மாலை அவள் ட்ரீட் கொடுக்கிறாள். 4 மணிக்கு. அவள் மூலமாக கூட வேலை கிடைக்கலாம் யாருக்கு தெரியும். சிஸ்டம் எடுத்து வைத்து ஏதாவது மெயில் வந்திருக்கிறதா என செக் செய்தாள் .எதுவும் பெரிதாக இல்லை. அவள் திருச்சியை சேர்ந்திருந்ததால் பெரிய சம்பளம் கிடைக்காது. அதோடு சென்னைக்கு போக விருப்பமும் இல்லை.
இன்டர்வியூவுக்கு தேவையானவற்றை தயார் செய்ய அப்பாவுக்கு தெரிந்த ஒருவர் வகுப்புகள் எடுத்து வந்தார். அது காலை 10 மணிக்கு. அங்கு போனால் நேரம் போவதே தெரியாது. மதியம் ஒரு மணிக்குத்தான் வீடு திரும்புவாள்.
பெரிய எதிர்பார்ப்புகள் இல்லாத வாழ்க்கையாய் இருந்த போதும் தான் சொந்த காலில் நிற்க வேண்டும் என்ற எண்ணம் மதுமிதா மனதில் இருந்தது. அதற்க்கு உண்டான சூழ்நிலை இல்லை. மதியம் போல பிரேம் ஃபோன் பண்ணியிருந்தான். வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு ஒரு இன்டர்வியூ இருப்பதாகவும் கம்பெனி புதிதாக இருப்பதால் எல்லாவித பொறுப்புகளையும் பார்க்க நேரிடலாம் என்று சொன்னான். ரொம்ப தாங்க்ஸ் டா என்றாள்.
மாலை 4 மணி ட்ரீட் பார்ட்டிக்கு மூன்றரை மணிக்கே போய்விட்டாள் .அதிகம் பேர் வரவில்லை. ஸ்வேதா கம்பெனி எப்படி என்று விசாரித்தாள் . கம்பெனி என்னவோ நன்றாகத்தான் இருக்கிறது ஆனால் எப்போது வீட்டுக்கு அனுப்புவார்கள் என்று சொல்ல முடியாதென்றாள்.ஓ என்றவாறு எல்லோரும் சிரித்தார்கள். அதெல்லாம் கார்ப்பரேட் உலகத்தில் சகஜம் என்றாள் ஸ்வேதா . கேக் வெட்டி எல்லோருக்கும் கொடுத்தாள். டிரிங்க்ஸ் ம் அரேஞ்ச் செய்யப்பட்டிருந்தது . இரவு 9 மணி போல மதுமிதாவை வீட்டில் டிராப் செய்தாள் ஸ்வேதா. ரொம்ப கவலை படாதே மது எல்லாம் சரி ஆகிவிடும் என்றாள் ஸ்வேதா,எனக்கு எதுவும் வேண்டாம்மா என்றவாறு தான் அறைக்குள் நுழைந்தாள் . மறுபடியும் ஒரு முறை மொபைலை செக் செய்தாள் . இருக்கிற டென்ஷன் வாழ்வில் எப்படித்தான் ஓயாமல் ஃப்ரெண்ட் வேண்டுகோள் அனுப்புகிறார்களோ என ஆச்சர்யப்பட்டாள் . ஒரு வேளை நாமும் யாரையாவது லவ் பண்ணியிருந்தால் இவ்வளவு தூரம் அலைய வேண்டியிருக்காதோ என எண்ணினாள்.
வெள்ளிக்கிழமை இன்டர்வியூவுக்காக ப்ரிப்பேர் செய்து கொண்டிருந்தாள். எப்படியும் இந்த முறை வேலை கிடைத்து விடும் என நம்பினாள் . வேலைக்கு போகுமிடத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை எல்லோரும் போல அவளும் அறிந்திருந்தாள். அவளும் அதை சமாளிக்க மனதளவில் திடம் கொண்டிருந்தாள் . காலை 9 மணிக்கே கிளம்பிவிட்டாள். ஸ்வேதா அட்வான்ஸ் வாழ்த்து அனுப்பி இருந்தாள். அப்பா காரில் வந்து டிராப் செய்வதாய் சொன்னார். மறுக்க முடியவில்லை. பயப்படாதே மது எதுவாயிருந்தாலும் பார்த்துக்கலாம் என்றார். இன்டர்வியூ விற்கு இவளையும் சேர்த்து 5 பேர் வந்திருந்தார்கள். இரண்டு வாலிபர்கள். இரண்டு பெண்கள். அவர்களிடம் பேச நேரம் இல்லை. ஏற்கனவே வைத்த ஆன்லைன் டெஸ்டில் இவள் பாஸ் ஆகி இருந்ததால் நேரடி இன்டர்வியூ. இவள் பெயர் சொல்லி கூப்பித்தார்கள். அங்கே ஒரு பெண்ணும், ஒரு ஆணும் இருந்தார்கள்.
உங்க எய்ம் சொந்தமா கம்பெனி ஆரம்பிக்கறதுன்னு சொல்லறீங்க ஆனா வேலைக்கு வந்திருக்கிறீங்க என்றார். மதுமிதா ஏதோ விளக்கம் சொன்னாள் .அவர்களுக்கு அது பிடித்திருந்தது. இன்னும் சில கேள்விகள் கேட்டார்கள்.பதில் சொன்னாள் பிறகு மெயில் அனுப்புவதாக சொன்னார்கள். விடை பெற்றுக்கொண்டாள் எப்படி போச்சு இன்டர்வியூ என்றாள் அம்மா . நாளைக்கி சொல்லுறேன்னு சொல்லி இருக்காங்க. நீ என்ன நினைக்கிற. எப்படியும் வேலை கிடைத்து விடும் என நினைக்கிறேன் என்றாள். ஒரு நாள் தாமதமாக அந்த மெயில் வந்தது. சம்பளம் நிறைவாக இருந்தது. வீட்டில் எல்லோருக்கும் மகிழ்ச்சி . அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இத்தனை நாள் காத்திருப்புக்கு பிறகு நல்ல செய்தி. பிரேமுக்கு நன்றி சொன்னாள் . இன்னும் இரண்டு நாட்களில் ஜாயின் செய்ய சொல்லி இருந்தார்கள். வீட்டு முனைக்கு கேப் வந்துவிடும். இவளுக்கு அதிக சங்கடங்கள் இருக்காது.
கோவிலுக்கு போய்விட்டு வேலைக்கு போகலாம் என முடிவெடுத்திருந்தாள் . அதன் படியே கோவில் போய் அர்ச்சனை செய்தாள் . முதல் 3 மாதங்கள் ட்ரைனிங் பீரியட். அதன் பிறகு அவர்களுடைய விருப்பத்திற்கேற்ப பெங்களூர் அல்லது சென்னைக்கு மாற்றல் வாங்கி கொள்ளலாம். கம்பெனி முதல் நாள் அதிக பதற்றம் இல்லாமல் ஓடியது. சில எளிமையான வேலைகள் கொடுத்தார்கள். எல்லோரும் சகஜமாக பழகினார்கள். முதல் மாசம் சம்பளம் வாங்கியதும் அப்பாவுக்கு ஒரு வாட்ச் அம்மாவுக்கு ஒரு சாரீ என மனதில் நினைத்திருந்தாள் . ஸ்வேதா வீட்டுக்கு வந்திருந்தாள். என்னடி என்னவோ போல இருக்கே என்றாள் மதுமிதா. ஒண்ணும் இல்லடி நேத்து ஆபீஸ் ல ஒரே ஸீன் ஆயிடிச்சி என்றாள். என்னடி நடந்தது அவன்தான் என்னை டேட்டுக்கு கூப்பிட்டான் நானும் சரின்னு சொன்னேன் அப்புறம் அவன் திடீர்னு வீணாவை கூட்டிட்டு போய் விட்டான். ம் இதெல்லாம் சகஜம்னு இருந்தா அவ முன்னாடி என்னை மட்டம் தட்டுறான் . மனசே சரி இல்லைடி. நீ அந்த மாதிரி யாருக்கும் இடம் கொடுக்காதே என்றாள் ஸ்வேதா.
இந்த வாரம் நைட் ஷிப்ட் வர வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். எப்படியோ அதை தவிர்க்க முயன்றும் முடியாதென்று சொல்லிவிட்டார்கள். சில பேர் வந்து வெளிப்படையாக கேட்டார்கள். இவள் குணம் தெரிந்தும் இப்படி செய்கிறார்களே என்று ஆச்சரியம் அடைந்தாள் . 3 மாசம் முடிவடைந்தது. இவளுடைய மதிப்பு ஆபீஸில் உயர்ந்திருந்தது. உங்களை பெங்களூர் ட்ரான்ஸ்பர் பண்ண முடிவு பண்ணியிருக்கோம் என்றார்கள்.இவளும் ஒப்புக்கொண்டு விட்டாள் . இன்னும் 15 நாட்களில் ஜாயின் செய்ய வேண்டும் என்றார்கள், எல்லவற்றையும் சமாளிக்க வேண்டியதுதான் என்று நினைத்துக்கொண்டாள். அப்பாவும் அம்மாவும் வந்து தங்குமிடத்தை பார்த்து போனார்கள்.அவளே சமைத்து கொள்ளும் வசதிகள் இருந்தன. வந்தனா ஏற்கனவே அறிமுகமானவள் அவளுடைய அறைத்தோழி . அவளுடைய பாய் ஃப்ரெண்ட் சுதீப் அவ்வப்போது வந்து போவான் . மற்றபடி அவளுக்கு தொந்தரவுகள் இருக்காது.
பெங்களூர் மதுமிதாவிற்கு பிடித்திருந்தது. திரும்பவும் 6 மாதத்தில் திருச்சி அழைத்து கொள்வதாக சொல்லி இருக்கிறார்கள் ஆனால் அப்பா, அம்மாவை பெங்களூர் அழைத்து வந்து விட வேண்டும் என்று எண்ணினாள். அன்று டியூட்டி முடித்து இரவு திரும்ப வர சற்று தாமதமாகி விட்டது. வீடு வெளியில் பூட்டியிருந்தது. வந்தனாவுக்கு ஃபோன் செய்தாள் அவள் ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. இவளே பூட்டை திறந்தாள் . உள்ளே இருந்து சாராய நெடி மூக்கை துளைத்தது. சுதீப் ஒரு மூலையில் கிடந்தான். அவன் முன் மண்டையில் இருந்து ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. அவளுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. அருகில் இருந்த துணியை கிழித்து அவன் தலையில் கட்டு போன போனாள் . அவன் போதையில் தடுமாறி விழுந்திருந்தான். அவனை இழுத்து பிடித்தாள் . அவனோ அவளை அணைக்க முயன்றான். ஒருவழியாக ஃபிரிஜ்ஜில் இருந்த சோடா வை அவன் முகத்தில் தெளித்து எழுப்பினாள் . அவனை ஒரு கேப் வரவழைத்து அவன் வீட்டில் டிராப் செய்யும்படி கேட்டுக்கொண்டாள் . இரவு 3 மணிக்கு வந்தனா வந்தாள் . உனக்கேன் இந்த வேலை என மதுமிதாவை கடிந்து கொண்டாள் வந்தனா. இவள் பதில் ஏதும் பேசவில்லை. மறுநாள் சுதீப் வந்து மதுமிதாவிடம் மன்னிப்பு கேட்டான் . அத்தோடு வந்தனாவை breakup செய்து விட்டதாகவும் சொன்னான்.
வந்தனா ரூமை காலி செய்துவிட்டாள் . இவளுக்கு கொஞ்சம் கலக்கமாக இருந்தது. தான் செய்தது சரியா தவறா என புரியாமல் தவித்தாள் . சுதீப் ஃபோன் செய்திருந்தான். நைட் பார்ட்டிக்கு வருகிறாயா என்று. இவளுக்கு இவள் மீதே வெறுப்பாய் இருந்தது. சுதீப் நம்பரை பிளாக் செய்தாள். அப்பாவுக்கு உடம்பு சரியில்லை என தகவல் வந்தது. அவள் லீவு சொல்லிவிட்டு உடனே திருச்சி போனாள் .
நீ ஒரு கல்யாணம் பன்னிக்கோம்மா என்றார். இப்போ இருக்குற சூழ்நிலையில வேண்டாம்ப்பா ஒரு 6 மாசம் போகட்டும் என்றாள். மறுபடி பெங்களூர் வந்த போது வந்தனா வேலையை விட்டு போனது தெரிய வந்தது. சுதீப் அவ்வப்போது வேறு போனில் இருந்து கால் பண்ணி வந்தான். இனிமே இப்படி பண்ணினா போலீஸ் கால் பண்ணுவேன் என எச்சரித்தாள். அப்புறம் கால் வரவில்லை. பெங்களூர் எவ்வளவோ பாடங்களை கற்றுதந்தது. அப்பா சொல்கிற மாப்பிள்ளையை கல்யாணம் செய்து கொள்ள வேண்டியதுதான் என நினைத்தாள் . பெங்களூர்வாசியான ரவியை அறிமுகப்படுத்தி வைத்தார் மதுமிதா அப்பா. அவர்கள் குடும்பம் மதுமிதாவிற்கு பிடித்திருந்தது. பெங்களூரிலேயே நிச்சயம் நடைபெற்றது. சுதீப் வந்திருந்தான்.ரொம்ப லக்கி பா நீ என்று ரவியை பார்த்து சொன்னான்.
ரவி ஒரு இரவு பறவை. நைட் பார்ட்டி இல்லாமல் அவனால் முடியாது இது தவிர்க்க முடியாதாதென மதுமிதாவிருக்கு தோன்றியது. இவளையும் அழைத்திருந்தான். சுதீப் நீயே மதுவை டிராப் பண்ணு என்று சொல்லிவிட்டு போதையில் மயங்கினான். சுதீப்பும் இவளும் சேர்ந்து அவனை வண்டியில் கிடத்தினர் . நானே வண்டி ஓட்டுகிறேன் என்றான் சுதீப். அவன் குடித்திருக்கவில்லை. என்னாச்சு என்றாள். நான் அதெல்லாம் எப்பவோ ஸ்டாப் பண்ணிட்டேன் என்றான். ரவியை வீட்டில் விட்டார்கள். அவள் ரூமுக்கு வந்த போது மணி விடிகாலை 3 ஆகி விட்டிருந்தது,சுதீப் விடை பெற்றுக்கொண்டான். இப்படியே போனால் சரியாக வராது என்று ரவியிடம் சொன்னாள் . உனக்கு என்ன இனிமே இப்படி நடக்காது என்றான்.
கம்பெனி டூர் என்று அழைத்திருந்தார்கள். மது போகவில்லை. இவளுக்கு ஜூரம் . ரூமிலேயே படுத்து கிடந்தாள். ரவி வந்து டாக்டரிடம் அழைத்து போனான். சாயங்காலம் போல சுதீப் வந்தான். ஏதோ பழங்கள் வாங்கி வந்தான். உனக்கு பிரச்சனை இல்லை என்றாள் நான் உனக்கு துணையாக இன்று இரவு இங்கு தங்கி கொள்ளட்டுமா என்றான் . அதெல்லாம் வேண்டாம் ரவி வருவார் பார்த்துக் கொள்ளலாம் என்றாள். மணி 11 ஆகி விட்டு இருந்தது, ரவி ஃபோன் எடுக்கவில்லை. ஜுரம் அதிகமானது. அவளை அழைத்து கொண்டு போய் ஹாஸ்பிடல் அட்மிட் செய்தான். கூடவே இருந்து பார்த்து கொண்டான். காலையில் ஓடி வந்தான் ரவி. என்னாச்சு மது ரொம்ப சாரி ஃபோன் ஸ்விட்ச் ஆஃப் ஆயிடுச்சு என்றான்.
இரண்டு நாட்களில் ஆபீஸ் வந்தவள் சுதீப் இடம் இருந்து ஃபோன் வாராததையே மறந்து போனாள் . அவனுக்கு ட்ரான்ஸ்பர் ஆகி விட்டது என ரவி சொன்னான். கல்யாணத்துக்கு இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. சுதீப்பையும் கூப்பிட்டிருந்தாள் . அவன் வந்ததும் புதிய உற்சாகம் வந்ததை போல தோன்றியது. மாலை 6 மணிக்கு அவன் தங்கியிருக்கும் ஹோட்டல் அறைக்கு போனாள் . அவன் அவளை தவறாக நினைக்கவில்லை. சுதீப் உன்னை என்னால் மறக்கவே முடியாது என்றாள். அவள் கண்கள் கலங்கி போயிருந்தன. அவன் அவளை நெருங்கினான். அவள் அவன் உதடுகளில் முத்தமிட்டாள் . அங்கிருந்து வேகமாக கதவை திறந்து கொண்டு வெளியேறினாள்.
மறுநாள் ரவியுடன் மதுமிதாவிற்கு கல்யாணம் நடக்கவில்லை. மதுமிதா சுதீப்புடன் போய் விட்டதாக தகவல் மட்டுமே கிடைத்தது.

