வெயில் காலம்
வெயில் காலம்
சுகுமாரனும் செல்வியும் ஒரு வருடம் முன்பே பேசி வைத்த விஷயம்தான் அது. மருத்துவ படிப்பு படிக்க வைக்க மகளுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்பது தான் அது. அதற்காக தங்களின் பூர்வீக நிலத்தை விற்று விட்டிருந்தார்கள் . தங்களுக்கு ஒரு மகன் இருப்பதையே அவர்கள் மறந்து விட்டார்கள். ஸ்ரீ டாக்டர் பட்டம் வாங்குவதை கண்ணால் பார்த்து விட்டுத்தான் மறுவேலை என்பதை போல அவர்கள் ஒட்டுமொத்த குடும்பமும் இயங்கியது. ஸ்ரீ என்கிற ஸ்ரீதேவி அந்த வீட்டின் முதல் பட்டதாரி . அவள் அண்ணன் குமரேசன் வெளிநாட்டில் கம்பி fitter வேலை பார்த்து வந்தான். இப்போது இரண்டாம் ஆண்டு மருத்துவம் படிக்கும் ஸ்ரீ ஐ பார்க்க காலையிலேயே கிளம்பிக்கொண்டிருந்தார்கள் சுகுமாரனும் செல்வியும் . அவளுக்கு தேவையான உடைகள் , சில உணவு பொருட்கள் போன்றவற்றை வாங்கி கொண்டு போகலாம் என முடிவு செய்தார்கள். புத்தகம் வாங்கலாம் என்ற யோசனையை பக்கத்து வீட்டு அக்காதான் குடுத்தார்கள் அவளுக்கு அது சர்ப்ரைஸ் ஆக இருக்குமென்று சொன்னார்கள்.
யார் யாரையோ விசாரித்து சில புத்தகங்களையும் வாங்கி கொண்டார்கள். வெயில் கடுமையாய் இருந்த போதும் டிரைன் ரிசர்வேஷன் செய்திருந்த படியால் பிரச்சனை இல்லை. நாகர்கோவில் இருந்து சென்னைக்கு பயணம். கிளம்பும் முன் குலதெய்வம் கோவிலுக்கு போக வேண்டும் கட்டாயம் என செல்வி சொல்லி விட்டாள் . சுகுமாரனுக்கு தெய்வ நம்பிக்கை இல்லை. அவர்களுடையது கலப்பு திருமணம். எம்மவ படிச்சு டாக்டர் ஆகி எல்லோரையும் காப்பாத்துவா அப்ப கடவுள நம்புறேன் என்று சொல்லுவார். அவர்கள் பகல் டிரைன் ஒன்றை புக் செய்திருந்த படியால் அனல் அடிக்கத்தான் செய்தது. இவருக்கோ வெயில் தாங்காது. அடிக்கடி போய் முகம் கழுவி வந்தார். ஏற்கனவே தான் வருகிற ஞாயிற்றுகிழமை வருவதாக சொல்லி இருந்தார்.டிரைன் வியாபாரிகள் விற்ற எந்த உணவு பண்டத்தையும் அவர் வாங்க வில்லை. அவருக்கு மனமெல்லாம் மகள் நினைப்பிலே ஊறி கிடந்தது. நீட் எழுதிய பிறகு போதுமான ஸ்கோர் கிடைக்கவில்லை என்ற போதும் அவளை அவர் ஊக்கப்படுத்தி வந்தார்.ஸ்ரீ அவரது எண்ணத்தை நிறைவேற்றுவதாய் வாக்கு கொடுத்திருந்தாள் . மதியம் 2 மணி போல ஸ்ரீ யிடம் இருந்து ஃபோன் வந்தது. என்னம்மா சாப்பிடியா என்று விசாரித்தார். நீங்க சாப்பிட்டீங்களா எதுவும் பிடிச்சத வாங்கி சாப்பிடுங்க அப்பா என்றாள் . வந்துட்டு எனக்கு ஃபோன் பண்ணுங்க என்றாள் ஸ்ரீ. அவளுடைய அன்றாட நடவடிக்கைகள் எந்த வகுப்பு, அவளுடைய உடைகள். உபகரணங்கள் போன்றவற்றை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தார் சுகுமாரன்.
ஊரில் உள்ள சில பேருக்கு இதில் நிறைய பொறாமை . பொம்பள பிள்ளைக்கு எதுக்கு இவ்ளோ படிப்பு அதுவும் நீட் ஸ்கோர் இல்லாத பிள்ளைக்கு என்றார்கள். அவ என்னோட பொண்ணு நான் படிக்க வைக்கிறேன் உங்களுக்கென்ன என எதிர் வாதாடுவார். ஸ்ரீ செலவுக்கென இந்த முறை இரண்டு ஆடுகளை விற்று அவற்றை காசாக்கி அவளது பாங்க் அக்கவுண்டில் போட சொல்ல வேண்டும் என எண்ணி இருந்தார். அதன்படியே செய்தார். இங்கே எல்லாம் நல்ல வசதியான வீட்டு பசங்க படிக்கிறாங்க ஆனா நல்லா பழகுராங்க என்று சொல்லி இருந்தாள் .
டிரைன் சென்னை வந்து சேர்ந்தது. அவர்கள் இருப்பதிலேயே சிறிய ரக ஹோட்டல் அறை ஒன்றை தேர்ந்தெடுத்து கொண்டார்கள். குளித்து உடை மாதிரி எல்லாவற்றையும் தயார் செய்து கொண்டார்கள். அவர் வேஷ்டி மாற்றி சென்ற முறை ஸ்ரீ வாங்கி கொடுத்த பாண்ட் போட்டுக்கொண்டார்.அவர் தடுமாற்றம் இல்லாமல் இங்கிலீஷ் பேசுவார் அதனால் செல்விக்கு கவலை இல்லை. அதிகம் விசாரிக்க வேண்டியதில்லை. இவர் வந்தவுடன் ஃபோன் செய்யவில்லை சண்டே அதுவும் மகள் தூங்கட்டும் என்று விட்டுவிட்டார். 11 மணி போல ஃபோன் செய்து பேசினார்.ஏன்பா இவ்ளோ லேட் ஆ ஃபோன் பண்ணுறீங்க என்று கோவித்து கொண்டாள் . நீ படிக்கிற புள்ள சண்டே அதுவுமா செத்த நேரம் தூங்குவ அதுதான் என்றார்.
சற்று நேரத்தில் ஸ்ரீ யே வந்துவிட்டாள் . வந்ததும் அப்பாவையும் அம்மாவையும் கட்டிக்கொண்டாள். அவள் முகம் நோக்கி அவளது அம்மா பார்வையிட்டாள். என்னம்மா அப்படி பார்க்கிற என்றாள். சரியா சாப்பிடறாயா இல்லை பேர் பண்ணுறயா என்றாள். அதெல்லாம் ஒண்ணுமில்லை குமாரு ஃபோன் பண்ணுனா? போன வாரம் பேசுனான் .. உனக்கு ஜீன்ஸ் வாங்கி தர சொன்னான். அதெல்லாம் எதுக்குப்பா ? இருக்கட்டும்மா வயசு பிள்ளைகள் போடறதுதானே.. படிப்பெல்லாம் எப்படியம்மா போவுது அதெல்லாம் நல்லா போவுதுப்பா. போன வருஷம் உன்னை காலேஜ் ல சேர்க்குறப்ப எனக்கு உயிரே இல்ல. எப்படியோ ரெண்டு வருஷம் ஆயிடுச்சு. அதெல்லாம் ஒண்ணும் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நான் உங்க பொண்ணுப்பா என்றாள். சரி வாங்க என அவர்களை அழைத்து கொண்டு ஹாஸ்டல் புறப்பட்டார்கள்.மெட்ரோ ஸ்டேஷன் வழி அவர்கள் போனார்கள் .
அவளுடைய தங்கும் அறை சுத்தமாகவும் எளிமையாகவும் இருந்தது, இவர் தான் வாங்கிய புத்தகங்களை கொடுத்தார். இதெல்லாம் எதுக்கு இருக்கிறத படிக்கவே நேரம் இல்ல என்று அலுத்து கொண்டாள். இருங்க கேண்டீன் ல ஏதாவது வாங்கி வருகிறேன் என போனாள் . அப்போது அங்கு வந்த அவளது ஃபிரண்ட்ஸ் அவர்களை நலம் விசாரித்தார்கள். அவர்களிடம் ரெண்டு வாழைப்பழத்தை நீட்டினார். அவர்கள் சிரித்து கொண்டே வாங்கி கொண்டனர். மதியம் வெளியே போய் சாப்பிடலாம் என்று சொல்லி இருந்தாள் . ஆனாலும் இங்கே வெயில் ரொம்ப ஜாஸ்தி என்று செல்வி சொல்லிக்கொண்டிருந்தாள் .
மதியம் ஒரு நல்ல ஹோட்டல் ஆக பார்த்து சாப்பிட சென்றார்கள்.ஸ்ரீயே எல்லாவற்றையும் ஆர்டர் செய்தாள் அப்புறம் இன்னொரு ரெண்டு நாள் இங்கேயே இருங்கப்பா சுத்தி பார்த்துட்டு போகலாம். உன் படிப்பு பாழாயிடுமே ஸ்ரீ. நீ படிப்பை முடி அப்புறம் எப்பவும் உன் கூட கம்பவுண்டர் மாதிரி நான் இருப்பேன் என்றார். உங்களுக்கு எப்பவும் கிண்டல் தான் என்றாள் செல்வி.மதியம் கொஞ்ச நேரம் தூங்கி எழுந்தார்கள் செல்வியும் சுகுமாரனும். அவள் எங்கோ வெளியில் போயிருந்தாள். ஸ்ரீ படிக்கிற வயசில காதல் எல்லாம் சகஜம் ஆனா உன் மனசுல வைராக்கியம் இருக்கணும் என்றார் சுகுமாரன். சரிப்பா என்றாள் .
இரவு 11 மணி டிரைன் புக் பண்ணியிருந்தார்கள். அவருக்கு போக மணசில்லை. இரண்டு நாட்கள் தங்கி விடலாம் என எண்ணினார். அப்புறம் அந்த செலவு காசிருந்தால் ஏதாவது ஸ்ரீக்கு வாங்கலாம் என நினைத்தார். ஸ்டேஷன் வந்து போனால் திரும்ப ஹாஸ்டல் போக லேட் ஆகிவிடும் அதனால் ஸ்ரீயை வர வேண்டாம் என சொல்லி விட்டார். செல்வி சாயங்காலம் அவள் தலையில் வைத்த பூவை தொட்டு பார்த்தாள் . அப்பப்போ கோவிலுக்கு போய்ட்டு வாம்மா என்றாள். குலதெய்வ பிரசாதத்தை ஸ்ரீயின் நெற்றியில் வைத்து விட்டாள். செல்வி கண்கலங்கியதை மறைத்து கொண்டாள். இரவு 11 மணி டிரைன் ஏறும் பொது ஸ்ரீயிடம் போனில் பேசினார். நீங்க கவலைபடாதீங்க அப்பா என்றாள். தைரியமா இருங்க என்றாள்.
காலையிலேயே அவருக்கு கொஞ்சம் பிரஷர் அதிகமாக இருந்தது. மயக்கம் வருவது போல இருந்தது. அப்படியே ஈசி சேர் ஒன்றில் அமர்ந்து விட்டார். செல்வி என்னங்க வேலைக்கு போகலையா என்றாள். என்னவோ போல இருக்கு என்றார். சரி கஷாயம் வெச்சு தரேன் குடிங்க என்றாள். கஷாயம் குடித்தவர் சற்றே அசதியில் தூங்கி போனார். மதியம் 12 மணி இருக்கும். வெயில் தகித்தது. போனை எடுத்து ஸ்ரீயிடம் பேசலாம் என நினைத்தார். ஸ்ரீயிடம் இருந்து 10 மிஸ்டு கால் வந்திருந்தது. அவசர அவசரமாக ஃபோன் செய்தார். செல்வி செல்வி என உரக்க கூப்பிட்டு கொண்டே ஃபோன் டயல் செய்தார். ரிங் போய்க்கொண்டிருந்தது . யாரும் எடுக்கவில்லை. இவர் பதட்டத்தின் உச்சிக்கே சென்றார்.கொஞ்ச நேரம் கழித்து யாரோ ஃபோன் எடுத்தார்கள். ஸ்ரீ ராகிங் பிரச்சனையில் தூக்குமாட்டி செத்துவிட்டதாக
தகவல் சொன்னார்கள். ஐயோ கடவுளே என்றவாறு தரையில் வீழ்ந்து அழ தொடங்கினார் சுகுமாரன்.
