காதலிக்க நேரம் இருக்கு
காதலிக்க நேரம் இருக்கு
காதலிக்க நேரம் இருக்கு
உல்லாச பயணம் போக ஒரு வேன் ஏற்பாடு செய்து அதில் பத்து பேர் ஒரு கூட்டமாக சென்றனர்.
அதில் ஒரு ஜோடியை பத்தி தான் கதை.காதலன் சிவா காதலி ஜீனத்.இருவரும் கல்லூரியில் இருந்து காதலித்து வருகிறார்கள்.இது இருவரது பெற்றோருக்கும் தெரியும்.இரு குடும்பமும் பக்கத்து பக்கத்து வீடு.சிறு வயதில் இருந்தே தெரிந்தவர்கள்.
உல்லாச பயணம் மகிழ்ச்சியாக இருந்தது.இந்த பயணத்தில் இருந்தவர்கள் இந்த இரு குடும்பத்தையும் சேர்ந்தவர்கள் தான்.
இருவருக்கும் வேலை கிடைத்து சென்னை போகிறார்கள்.வேலை கிடைத்ததை கொண்டாட தான் இந்த உல்லாச பயணம்.
இவள் படிப்பு முடிய முடிய அவளது சொந்தக்காரர் ஒருவர் தன் மகனுக்கு பெண் கேட்டு வந்தார்.அவரது பையன் படிக்கவில்லை.ஆனால் வியாபாரம் செய்து நிறைய பணம் கையில் இருந்தது.ஜீனத் அப்பா வந்தவரிடம் அவள் ஏற்கனவே பக்கத்து வீட்டு பையனை தான் கட்டிக்குவேன் என்று சொல்லி விட்டாள்.அதனால்
என் பெண்ணை உங்கள் பையனுக்கு கொடுக்க முடியாது என்று உறுதியாக சொல்லி விட்டார்.
சில மாதங்களுக்கு பிறகு சிவா ஜீனத் திருமணம் செய்ய நாள் குறித்து இரு குடும்பமும் ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்கள்.
இரு குடும்பமும்,அவரவர் மத சம்பிரதாய படி திருமணத்தை நடத்த முடிவு செய்தார்கள்.
அதை அறிந்த ஜீனதின் உறவினர்,பெண் கேட்டவர் ,மத தலைவரிடம் சொல்லி,அந்த திருமணம் நடத்த சில நிபந்தனைகளை விதிக்க சொன்னார்.அந்த விவரம் ஜீனத் வீட்டிற்கு தெரிய படுத்தினார்கள்.
அதாவது சிவா ஜீனத் மதத்திற்கு மாறி அவளை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான்.
அதற்கு சிவா குடும்பம் ஒத்து கொண்டது.ஆனால் ஜீனத் ஒத்து கொள்ளவில்லை.நான் அவரை அந்த நோக்கத்தில் காதலிக்கவில்லை.இதற்கு நான் உடன்பட மாட்டேன்.அப்படி ஒரு நிபந்தனையுடன் நான் அவரை திருமணம் செய்ய மாட்டேன்.அவருடைய மதத்தையும் அவரையும்,விரும்பி தான் காதல் செய்தேன்.அதனால் நீங்கள் போடும் இந்த நிபந்தனையை ஏற்று கொள்ள மாட்டேன்.அப்படி ஒரு திருமணம் எனக்கு தேவை இல்லை என்று உறுதியாக சொல்லி விட்டாள்.அதனால் அவர்கள் திருமணம் நின்று விட்டது.அதை தாங்க முடியாமல்,ஜீனத் குடும்பம் அங்கு இருந்து குடி பெயர்ந்து வேறு இடத்திற்கு போய் விட்டார்கள்.
அந்த காதல் அத்துடன் முடிந்து விட்டது.
முற்றும்