கால பயணம்
கால பயணம்
(Time travel)
காலையில் வீட்டில் சுப்ரபாதம் பாடல் ஒலிக்க பால்காரர் அம்மா பால் என்ற சத்தம் போட மெதுவாக கண்களை திறந்தாள் பானு. அவள் அம்மா" காலையில் நல்ல தூங்க வேண்டியது. இரவில் லேப்டாப்பை பாக்க வேண்டியது. " என்று திட்டினாள் . எதையும் காதில் வாங்காமல் பாத்ரூம் சென்று கதவை அடைத்தாள் .காதில் ஹெட் செட் போடு கொண்டு பாட்டு கேட்க ஆரம்பித்து விட்டாள் .
பானு IT கம்பனியில் நல்ல வேலை. பானுவின் அம்மா இல்லத்தரசி. அப்பா விவசாயி . பானுவின் அம்மா அப்பாவுக்கு துணையாக வயலுக்கு சென்று விடுவார். பானுவுக்கு அவள் அப்பா விவசாயி என்று சொல்வது பிடிக்கலை. அப்பாவுக்கு எப்பவும் உதவ மாட்டாள். இப்ப WFH work from home என்பதால் வீட்டில் இருக்கிறாள்.
பானுவின் அம்மா காலை உணவை செய்து வைத்து விட்டு வயலுக்கு சென்று விடுவாள் .அன்று சனி கிழமை . பானுக்கு விடுமுறை. விடுமுறை நாளில் கூட அப்பாக்கு உதவ மாட்டாள். வீட்டில் சும்மா மொபைல் பாக்கும் போது time travel app பார்த்தாள் .அவளுக்கு இது எப்படி ஒர்க் ஆகுதுன்னு பார்க்க ஆசையா இருந்தது.
உடனே app யை டவுன்லோட் செய்தாள். அதில் வருடம் என்று கொடுத்து இருந்தது. அதில் 3000
என்று type செய்தாள் .அப்டியே இவன் 3000 வருடத்திற்கு சென்றாள்.
அவள் பார்த்த உலகமே வேறு மாதிரி இருந்தது. பைக்கே இல்லை. பறக்கும் கார் தான் இருந்தது. சின்ன பில்ட்டிங்ஏ இல்லை. எல்லாம் ரெம்ப பெருசா இருந்தது. ஐபோன் லேட்டஸ்ட் மாடல் னு விளம்பரம் இல்லை. IPhone வெறும் 200 ரூபா தான் . எல்லாமே
IOT டெக்னாலஜி தான். ஆனா ரெம்ப சூடா இருந்தது. கொஞ்ச நேரத்தில மூச்சி திரணியது. பக்கத்துக்கு ஷாப்பிங் மால் போனாள் .அங்கு ஆக்ஜிசன் சிலிண்டர் விற்பனையில் இருந்தது. வாட்டர் பாட்டில் ல இருந்தது. ரெண்டும் சேர்ந்து 30000 ரூபாய் .அதை வாங்கிட்டு வெளிய வந்தாள் .அங்க ஒரு பில்ட்டிங்ல இன்டெர்வியூ நடந்து கொண்டு இருந்தது. அங்க ஜாப் பொஸிஷன் அசிஸ்டன்ட் பார்மர் " உதவி விவசாயி " என்று இருந்தது.
அப்போ தான்
இவள் மரங்கள் இல்லை என்பதை கவனித்தாள் . அப்ப ஒரு அறிவிப்பு எல்லாரும் மழைக்கு தயாரா இருங்க என்றனர். ஒரு ஏரோபிளான் சில்வர் அயோடையை மேகத்தில் தூவ மழை பெய்தது.
பானுக்கு உண்மை உரைத்தது. எதிர்காலத்தில் மரம் இல்லை மழை இல்லை. சாப்பாடுக்கு தட்டுப்பாடு வந்து எல்லாரும் விவசாயம் செய்கின்றனர். தண்ணீரும் இல்லை .காற்றும் இல்லை. இப்ப மொபைல் எடுத்து 2023 என்று ஆஃப்பில் type செய்தாள் .
அவள் வீட்டிற்கு வந்தாள்..... வயலுக்கு சென்றாள்....அவள் அப்பாவுக்கு உதவ ஆரம்பித்தாள். இதை பார்த்த அம்மா அப்பா மகிழ்ந்தனர்.
முற்றும்...