ஆழ்கடல் அதிசயம்
ஆழ்கடல் அதிசயம்
ஆழ்கடல் அதிசயம்
மனோ காலிஃபோர்னியாவில் கடல் சம்பந்த பட்ட படிப்பில் மாஸ்டர் டிகிரி முடித்து விட்டு பி. ஹச் .டி ஆராச்சிக்கு விண்ணப்பித்து இருந்தான் .மனோவுக்கு ஆலன் என்ற நண்பன் இருந்தான். இருவருக்கும் தண்ணீரில் சாகசம் செய்வது பிடிக்கும். ஒருநாள் இருவரும் பெர்முடா முக்கோணத்தை பற்றி ஆராச்சி செய்ய கிளம்பினர். ஆலன் : பெர்முடா முக்கோணத்தை அப்ற்றி கொஞ்சம் சொல்லு.
மனோ : இது அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது.
ஆலன் : இப்ப அங்க போறோமா?
மனோ : ஆமா .மூன்று புள்ளிகளாக மூன்று நகரங்களை இணைக்கும் முக்கோணம்.
ஆலன்: எந்த மூன்று நகரங்கள் ?
மனோ : புளோரிடா , பெர்முடா புரடீகோ ரிக்கோ
ஆலன் : அப்டி என்ன விசேஷம் ?
மனோ : இந்த முக்கோணத்தில் மாட்டிக்கொண்ட கப்பல்கள் காணாமல் போகும். ஆகாயத்தில் இந்த முக்கோணத்திற்கு மேலாக பறக்கும் விமானங்கள் காணாமல் போகும் .
ஆலன் : சூப்பர் ! அப்ப நாம அங்க போய் என்ன நடக்குதுன்னு கண்டுபிடிக்கலாம் .
மனோ : விஞ்ஞானிகள் புவியின் காந்த தன்மை அதிகமாக இருப்பதால் இப்படி நடக்குது என்று கூறுகின்றனர்.
ஆலன் : ரெம்ப இன்டெர்ஸ்ட் ஆஹ் இருக்கு.
மனோ ஆலன் கப்பலும் அந்த முக்கோணத்தை வந்தடைந்தது. இருவரும் கடலுக்குள் சென்றனர். மனோ ஆக்ஜிசன் சிலிண்டரை எடுத்து ஆலன் கு கொடுத்தான். இருவரும் முக கவசம் மாட்டி சிலிண்டரை முதுகில் கட்டி கொண்டனர். நீரில் சூழல் போன்று தோன்றி இருவரையும் இழுத்து சென்றது.
வெயில் சுள்ளென முகத்தில் பட்டது . இருவரும் எழுந்தனர்.
ஆலன் : அப்பாடா கடற்கரைக்கு வந்துட்டோமா ?
மனோ : தெரியல .புதிரா இருக்கு.
ஆலன் : அங்க பாரு .கோட்டை .
மனோ : டேய் நம்ம வேற எங்கயோ வந்துருக்கோம்.
அப்ப ரெண்டு பெரிய ஆக்டோபஸ்கள் வந்தது.
ஆக்டோபஸ்கள் : வாங்க தலைவர் கூப்பிடறார் .
ஆலன் : என்ன ஆக்டோபஸ்கள் பேசுது. தலைவரா? யாரு
மனோ : இது எந்த இடம்
ஆக்டோபஸ்கள் : இது அட்லாண்டிஸ் நகரம் . எங்க தலைவர் கடல் ராஜா !
இருவரும் திகைத்தனர். பின்னர் பின் தொடர்ந்தனர். கோட்டை பிரம்மாண்டமாய் இருந்தது. உள்ளே கடல் ராஜா சுறா அரியணையில் உட்க்கார்ந்து இருந்தது. சுறாவை பார்த்த இருவரும் ஓட ஆரம்பித்தனர். உடனே ஆக்டோபஸ்கள் எங்கள் தலைவர் மனிதர்களை சாப்பிடுவதில்லை என்றனர்.
மனோ: இந்த இடத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்க
சுறா: இந்த இடம் அட்லாண்டிஸ் நகரம். கடல் உயிர்களின் கோட்டை. மனிதர்கள் உணவுக்காகவும் மருந்திற்காகவும் , சாகசத்திற்க்காகவும் , ஆராச்சிக்காகவும் கடல் உயிரினங்களையும் வளங்களையும் சூறையாடுகின்றனர். அவர்களிடம் இருந்து எங்களை பாதுகாத்து கொள்ள நாங்கள் உருவாக்கிய இடம் தான் இது. இங்கேயும் மனிதர்கள் வந்து தொல்லை செய்கின்றனர். அதனால் இங்கு வரும் மனிதர்களை நாங்கள் ஆராச்சிக்காக பயன் படுத்தி கொள்வோம் . ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி
மனோவும் ஆலனும் தப்பிக்க முயன்றனர். ஆக்டோபஸ்கள் இருவரையும் வளைத்து பிடித்தது. ஜெல்லி மீன்கள் வந்து ஷாக் கொடுத்து மயக்கம் அடைய வைத்தன. இருவரையும் ஆராச்சி கூடத்திற்கு கொண்டு சென்றனர்.
நாம் பிற உயிரினங்களை துன்புறுத்துவது போல் மற்ற உயிர்கள் நம்மை துன்புறுத்தினால் என்னவாகும் ? சிந்திப்போம் .கடல் உயிரினங்களையும் வளங்களையும் காப்போம்.
முற்றும்.....