STORYMIRROR

B KARTHEKA

Thriller

4  

B KARTHEKA

Thriller

புரியாத புதிர்

புரியாத புதிர்

2 mins
395

அணு கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்தாள்.அவ்வளவு அழகு. சாப்ட்வேர் நிறுவனத்தில் டீம் லீட் ஆக பணிபுரிகிறாள். இன்று அவளை பெண் பார்க்க வந்து இருந்தனர். அவள் அம்மா அவள் கையில் காபி கோப்பையை குடுத்து "போ எல்லாருக்கும் கொடு " என்றார். 


அவள் என்னதான் டீம் லீட் ஆக இருந்தாலும் அவளுக்கும் தான் பெண் என்ற உணர்வு அச்சத்தையும் நாணத்தையும் தந்தது.தைரியத்தை வரவழைத்து கொண்டு காபி கோப்பையுடன் சென்றாள். மாப்பிள்ளைக்கு அணு வை பிடித்து விட்டது. 


அப்போது மாப்பிள்ளையின் அம்மா "என் மருமகள் அழகா இருக்காள் " இரு வீட்டாரின் சம்மதத்தோடு தாம்பூல தட்டுகளை மாற்றிக்கொண்டனர். திருமணம் வெகு விமர்ச்சியாக நடந்தது. மறுநாள் மாப்பிள்ளையும் அணு வும் கிளம்பிட்டாங்க. அப்போ பெண் அம்மா வந்து" அமெரிக்கா போயி மறந்துராத.அடிக்கடி போன் பண்ணு "சொன்னாங்க .

 

அணு வும் மாப்பிள்ளையும் கலிபோர்னியா ஏரோட்ராம் ல இறங்கி அவங்க புது வீட்டுக்கு போனாங்க. அப்ப மாப்பிள்ளை அணு கிட்ட " நான் எங்க அம்மா சொன்ன மாதிரி சாப்ட்வேர் என்ஜினீர் இல்ல. நான் என்ன வேலை பார்கிறேன் என்று யாருக்கும் தெரியாது.


இதை கேட்ட அணு அதிர்ச்சியானாள். அப்போ மாப்பிள்ளை " நான் ஏரியா 51 இல் சயின்டிஸ்ட் ஆக இருக்கேன். ஆனால் இது யாருக்கும் தெரியாது". அணு இப்ப கொஞ்சம் யோசித்தாள்.பின்பு ஏரியா 51 பத்தி நல்லா தெரியும் . அங்க அமெரிக்கா வோட விமான ஆராய்ச்சி நிலையம் இருக்குல்ல .


அதற்க்கு அவன் ஏரியா 51 பெரிய புதிர் னு சொன்னான். அவளுக்கு ஆச்சிரியம் தாங்கல .என்ன புதிர் னு கேட்டாள். அப்போ அவன் "நம்ம எப்ப கம்ப்யூட்டர் அதிகமா உபயோகப்படுத்த ஆரம்பிச்சோம் . 20 நூற்றாண்டு தொடக்கத்தில் தான். அதுக்கு முன்னாடி கம்ப்யூட்டர் ரூம் சைஸ் இருக்கும். ஏரியா 51 ல கண்டுபிடிச்ச ஒரு சிப் , மதர் போர்டு கு மூலம்.


ஏரியா 51 ள்ள இருக்கிற பல விஷயம் புதிர் தான் . அந்த மினெரல்ஸ் நம்ம எர்த் ல ரெம்ப இருக்கிறது இல்ல. ஒரு UFO ல கிடைச்ச பொருள்களை வச்சு தான் ரெ-இன்ஜினியரிங் செஞ்சு அத நம்ம பூமி ல உபயோகப்படுத்திட்டாங்க. ஏலியன் நம்ம பூமிக்கு வந்துட்டு போற இடம் ஏரியா 51." 


அணு " நீங்க பார்க்கிற வேலை எல்லாருக்கும் கிடைக்காது .நான் ரெம்ப லக்கி " என்றாள். உடனே அவன் "நான் ஏரியா 51போய்ட்டு வர ஆறு மாசம் ஆகும் " என்றான் .அணு துணிவுடன் காத்துக்கொண்டு இருப்பேன் என்றாள். 


முற்றும் ........



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil story from Thriller