செல்லப்பிராணி
செல்லப்பிராணி
செல்லப்பிராணி
என்னுடைய வீட்டில் வளர்ந்த நாய் ஒன்றும் வெளிநாட்டு நாய் அல்ல.சாலை ஓரம் சுற்றி திரிந்த குட்டி நாய்.காலையில் நடை பயிற்சி செல்லும் போது கூடவே வரும்.நாளடைவில் அது என் பின்னாடியே வந்து பழகி என்னுடன் ஒட்டி கொண்டது,அப்படி என் வீட்டில் அடைக்கலம் தேடி கொண்ட செல்லப்பிராணி அது.
பெரிய புத்திசாலி என்று சொல்ல முடியாது.ஆனால் நன்றியுள்ள ஜீவன்.எப்போதும் வாசலில் படுத்து கிடக்கும்.புதிதாக யாரேனும் வந்தால் சத்தம் போடும்.
நானோ மனைவியோ என்னுடைய மகளோ உள்ளே வரும் போது அதனுடன் விளையாடி விட்டு வர வேண்டும்.
மிச்சம் மீதி இருக்கும் சாப்பாட்டை போட்டால் சாப்பிட்டு விட்டு வாசலில் தூங்குவது தான் அதன் வேலை.
ரொம்ப நாள் என் மனைவி திட்டுவாள்,ஒரு தூங்கி மூஞ்சியை பிடித்து கொண்டு வந்த இருக்கீங்க என்று.நான் அதை
பிடிக்கவில்லை,
அதாக வந்து சேர்ந்த ஜீவன்.
இரவில் சத்தம் போடும்,அதட்டினால் மௌனமாகி விடும்.ஒரு நாள் இரவு ஓயாமல் சத்தம் போட,எழுந்து வந்து விளக்கை போட்டால்,வெளியில் கிடக்கும் ஒரு அட்டை பெட்டிக்கு அருகில் சென்று சத்தம் போட்டு குலைத்து கொண்டு நின்றது.டார்ச் வெளிச்சத்தில் பார்த்தால் ஒரு பாம்பு குட்டி.நாய் போட்ட சத்தத்தில். அது நகர்ந்து சாக்கடை துவாரம் வழியாக வெளியில் சென்று விட்டது.
ஒரு நாள் நான் வெளியூர் செல்ல வேண்டி இருந்தது.அன்று மனைவியும் மகளும் மட்டும் வீட்டில் இருந்தார்கள்.அன்று இரவும் ஓயாமல் சத்தம் போட,இவர்கள் பயந்து வெளியில் வரவில்லை.
அதிகாலை நான் ஆட்டோவில் வந்து இறங்கியதும்
என்னை பார்த்து சத்தம் போட்டு கொண்டு வந்தது.
அது முன்னால் போக நானும் பின்னால் சென்று பார்க்க,பின் வாசல் கதவு திறந்து கிடக்க,அதையும் தாண்டி கம்பௌண்ட் சுவர் வரை சென்றது.சுவருக்கு பக்கத்தில் ஒரு பை கிடக்க,அது நான் தினமும் அலுவலகம் கொண்டு செல்லும் பை.அதில் கொஞ்ச பணமும்,அலுவலக சாவியும் இருக்கும்.பையை எடுத்து பார்க்க,பணம் மட்டும் இல்லை.மர்ட் பொருள்கள் அப்படியே இருக்க,மீண்டும் பின் வாசல் வழியாக உள்ளே சென்றேன்.அதற்குள் நான் வந்து விட்டதை அறிந்து மனைவி சற்று கலக்கத்துடன் அறையை விட்டு வெளியில் வர,நான் நடந்ததை சொல்ல,அவளும் ஆமாங்க தம்பி (நாய்) சத்தம் போட்டு கொண்டு இருந்தான். பயத்தில் வெளியில் வரவில்லை என்றாள்.
வீட்டில் பணத்தை தவிர கழுத்தில் இருக்கும் நகைகள் தான், எப்போதும் இருக்கும்.வந்தவன் நாயின் சத்தம் கேட்டு,பையை மட்டும் தூக்கி கொண்டு ஓடி இருக்கிறான்.இவன் துரத்த,பையில் இருந்து பணத்தை மட்டும் எடுத்து கொண்டு,பையை விட்டு விட்டு ஓடி விட்டான்.
அதற்கு பிறகு மனைவி அந்த நாய்யை நன்றாக கவனித்து கொண்டு,அது சத்தம் போடும் போது வெளியில் சென்று கவனிக்க தொடங்கி விட்டாள்.அவளுக்கு இப்போது புரிந்தது அது ஒரு தூங்கு மூஞ்சி அல்ல என்று.