வாழ்க்கை பாடம்
வாழ்க்கை பாடம்
இந்த பூமியே எனக்காக படைக்கப் பட்டது... இதை அடக்கியாள... கட்டியாள..... பிறந்தவன் நான்! என எத்தனை ஆணவம்... கர்வம்..... திமிர்...
இன்று ....ஒற்றைச் சொல் உன் சப்த நாடிகளையும் அடக்கிவிட்டதே!
எல்லா உயிரினங்களையும்...... ஏன் ? பூமி கூட என் காலடியில் தான்! என ஆர்ப்பரித்து திரிந்த மனிதா, சுதந்திர வானில் சிறகடித்து பறந்த நீ..... சிறகொடிந்த பறவையாய் கூட்டுக்குள் அடைபட்டு கிடக்கிறாயே?
*வல்லவனுக்கு வல்லவன் ஒருவன் இப்புவியில் உண்டு*என இறைவன் உனக்கு கற்பிக்க நடத்தும் வாழ்க்கைப் பாடமா?