உயர் நெஞ்சம்
உயர் நெஞ்சம்
1 min
23.3K
உலகத்து உயிர்களுள்
உயர்வு தாழ்வு தானில்லையே !
பசியும் தாகமும் தான்
உலக உயிரனைத்திற்கும்
பொதுவன்றொ ?
தவித்த வாயும்
காய்ந்த தொண்டையும்
நனையும் அந்த நொடி
போன உயிரும் தான்
திரும்ப வந்த நொடியாகுமே !
உளமார்ந்த நன்றியில் தான்
கண்களும் அங்கே பணிக்குமே !
உயர்ந்த நெஞ்சமதையே
நாளும் தான் நினைக்குமே !