தேநீர் காதல்
தேநீர் காதல்
நம் தேநீர் நிமிடங்கள் ரம்மியம் நிறைந்தவை. ஒரு சுகவீன நாளில் மடி சாய்ந்து , நீ தயாரித்த தேநீரில் நான் பருகியது எல்லாம் உன் அன்பை தான். இப்போது நீ இல்லாத பொழுதுகளில் காலிக் குவளைகளிடம் கேட்டுக் கொண்டு இருக்கிறேன் எப்போது நீ வருவாய் என. தேநீர் எனக்கு உற்சாகம் இளைப்பாறல் நீயும் தான்.