பிள்ளைத்தமிழ்
பிள்ளைத்தமிழ்
பகழிக் கூத்தன் பாடிய பாட்டாம்
குகனின் அற்புதம் கூறிய ஏடாம்
தந்தை சொன்னார் தாத்தா கொடுத்ததில்
முந்தைய பகுதியில் மூன்றிட மில்லையே
தன்கடன் புகட்டும் தாபம் தீட்டும்
என்கடன் அறிந்தே ஏதும் செய்தேன்
அன்றே என்னிடம் ஆகும் காரியம்
வருடம் கடந்தும் வாசம் வரலையே
பிள்ளைத் தமிழை பிரசுரம் பதிக்க
பிள்ளைப் பெருமான் பிரியம் வகிக்க
கந்தனின் ஆசியில் கலைமகள் தந்ததால்
எந்தையின் ஆசையும் எளிதாய் முடியுமே
மணிமாறன் கதிரேசன்