நீதிதேவதை
நீதிதேவதை
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
உணவுப்பொருள் அட்டை
வங்கி அட்டை
வேண்டி நின்ற காலம்போய்
அட்டை போட்டு
பணி பெறும் காலமாகி விட்டபடியால்
நீதிதேவதை கண்ணில்
கட்டியிருந்த கருப்புத் துணியை
அவிழ்த்து அவளும்
தன் பங்கிற்கு அவளது
குடும்பத்திற்கு
அரசுப்பணி வேண்டி காத்திருக்கிறாள்!
காலத்துடன் ஒட்டி
உறவாட வழி காட்டவில்லையெனில்
குடும்பப் பெண்கள் விலைமகள்
பட்டம் சுமக்க பயந்தும்
பிள்ளைகளின் உயிருக்கு
பயந்தும் நீதி தேவதை
வாய்மூடி மௌனம் காத்தாளோ!