STORYMIRROR

Manoharan Kesavan

Abstract

4  

Manoharan Kesavan

Abstract

கவி வணக்கம் ... கவிவேந்தருக்கு!

கவி வணக்கம் ... கவிவேந்தருக்கு!

1 min
4

*ஒரு நாள் போதுமா* உன் பாடல்களை குறித்து பேச...நீ *பாடாத பாட்டெல்லாம்* யார் பாட்டெழுத முடியும்?!

*மயக்கம் என்ன* எனக் கேட்டால் உன் பாடலில் மயங்காதவர் யாருளர்?

 *எங்கேயும் எப்போதும்* உனது பாடல்களைப் பாடிக்கொண்டே *பாட்டுப் பாடவா* எனப் பாடி மகிழ்கிறோம்!

 *வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடு வரை பிள்ளை கடைசி வரை யாரோ?!* என மனதுக்கு *ஆறு மனமே ஆறு* ஆறுதலையும் *நான் ஆணையிட்டால்* என ஊக்குவிப்பையும் *நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா* என மறந்து கடந்து போதலையும் கற்றுத் தந்தது உனது பாடல் வரிகள் அல்லவா !

*ஆயிரம் நிலவே வா* என நீ அழைத்தது போல் யார் அழைப்பர் அந்த வெண்ணிலவை! *அதோ அந்த பறவை போல வாழவேண்டும்* என வாழ்க்கையை வாழ கற்றுத் தந்தது உனது பொன்னெழுத்துக்கள் தானே!

 *ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...ஒரு கோல மயில் என் துணை இருப்பு...இசைப் பாடலிலே என் உயிர்த் துடிப்பு... நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு*...என உன்னையே நீ வர்ணித்து எழுதியதை எப்படி மறந்து விட முடியும் எங்களால்?!

*கண்ணே கலைமானே* பாடி ஆரிராரோ உராரிரோ உனக்கே சொல்லிக் கொண்டு அமரத் துயில் கொண்டாய் போலும் கவி அரிமாவே!

*உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது வல்லவன் வகுத்ததடா* எனும் உன் சொல்லுக்கு நீயே இலக்கணம் !
வணங்கி மகிழ்கிறோம் கவியரசே!
வாழ்க உன் புகழ்
தமிழாய் ...
கவியாய்....
இப் புவிமீதில் என்றும்
ஒளிரும் அமர விளக்காய்!

வணக்கத்துடன்...
கே. மனோஹரன்


Rate this content
Log in

Similar tamil poem from Abstract