கவி வணக்கம் ... கவிவேந்தருக்கு!
கவி வணக்கம் ... கவிவேந்தருக்கு!
*ஒரு நாள் போதுமா* உன்
பாடல்களை குறித்து பேச...நீ
*பாடாத பாட்டெல்லாம்*
யார் பாட்டெழுத முடியும்?!
*மயக்கம் என்ன* எனக் கேட்டால்
உன் பாடலில் மயங்காதவர்
யாருளர்?
*எங்கேயும் எப்போதும்* உனது பாடல்களைப் பாடிக்கொண்டே
*பாட்டுப் பாடவா* எனப்
பாடி மகிழ்கிறோம்!
*வீடுவரை உறவு
வீதிவரை மனைவி
காடு வரை பிள்ளை
கடைசி வரை யாரோ?!*
என மனதுக்கு
*ஆறு மனமே ஆறு* ஆறுதலையும்
*நான் ஆணையிட்டால்* என
ஊக்குவிப்பையும்
*நினைக்கத் தெரிந்த மனமே
உனக்கு மறக்கத் தெரியாதா*
என
மறந்து கடந்து போதலையும்
கற்றுத் தந்தது
உனது பாடல் வரிகள் அல்லவா !
*ஆயிரம் நிலவே வா* என
நீ அழைத்தது போல் யார் அழைப்பர் அந்த வெண்ணிலவை!
*அதோ அந்த பறவை போல
வாழவேண்டும்*
என வாழ்க்கையை வாழ
கற்றுத் தந்தது உனது பொன்னெழுத்துக்கள் தானே!
*ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு...ஒரு கோல மயில் என் துணை இருப்பு...இசைப்
பாடலிலே என் உயிர்த் துடிப்பு... நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு*...என உன்னையே நீ
வர்ணித்து எழுதியதை
எப்படி மறந்து விட முடியும் எங்களால்?!
*கண்ணே கலைமானே* பாடி
ஆரிராரோ உராரிரோ
உனக்கே சொல்லிக் கொண்டு
அமரத் துயில் கொண்டாய் போலும்
கவி அரிமாவே!
*உள்ளத்தில் நல்ல உள்ளம்
உறங்காதென்பது வல்லவன்
வகுத்ததடா* எனும் உன் சொல்லுக்கு நீயே இலக்கணம் !
வணங்கி மகிழ்கிறோம் கவியரசே!
வாழ்க உன் புகழ்
தமிழாய் ...
கவியாய்....
இப் புவிமீதில் என்றும்
ஒளிரும் அமர விளக்காய்!
வணக்கத்துடன்...
கே. மனோஹரன்
