கர்வம் இழந்தேன்
கர்வம் இழந்தேன்
நான் யாருக்கும் அடிமையில்லை
என்று கர்வத்தோடு
கூறிய போது மறுத்தாள்....
'ஏன்' என்ற போது,
'எங்கே என் கண்களை
பார்த்து சொல்' என்றாள்....
முட்டாள் நான்
அவள் கண்களை பார்த்த
அந்த நிமிடமே அவளுக்கு
அடிமையாகி விட்டேன்
கர்வம் இழந்து....