STORYMIRROR

Sulochana Iyer

Abstract

5  

Sulochana Iyer

Abstract

கொரோனா

கொரோனா

1 min
497

அண்டை அயலாரை

அறிய வைத்தாய்...

ஆத்திகம், நாத்திகம்

இணைய வைத்தாய்....

இறைத்தன்மை

உணர வைத்தாய்!!

ஏற்றத்தாழ்வை

நீக்கி வைத்தாய்...

அகிலத்தை நீீீயோ

திணற வைத்தாய்!

உதவிக்கரங்கள்

நீண்ட வைத்தாய்...

தொழில்நுட்பம்

தோற்க வைத்தாய்!!

தொழிலாளரை

முடங்க வைத்தாய்...

வீட்டாரை வீட்டினுள்

அமர வைத்தாய்!!

பெற்றோர், பிள்ளையை

இணைய வைத்தாய்!!

எத்தனை பெரிய

மனிதரெனினும்

இறப்பே நித்தியம்

என்றுரைத்தாய்!!

வாழ்வை நொடிகளில்

விளக்கி வைத்தாய்...

வந்ததும், தந்ததும்

போதும் கொரோனா...

வந்த வழி திரும்பிப்

போய்விடு!!!


,


இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Abstract