கனவுகள்
கனவுகள்
கனவுகள் என்றும் நம் வாழ்க்கையில் ஓர்
அழகிய மாய்யை காட்சியே!...
அது என்றும் நம் வாழ்வில் நட்சத்திரம்
போல் தினமும் புதிதாய் தோன்றி நம்முள் மிளிர்ந்திடுமே!
ஐந்து வயதில் ,வானத்தை தொட்டிட கனவே!!!
அதுவே நம் வாழ்வில் முதல் கனவு!!
ஆறு வயதில், பறவை போல் உலகம் சுற்றிட கனவு...
இயலாததை ஏங்க வைக்குமே நம் இரண்டாம் கனவு!!!!
ஏழு வயதில், ஏழுசிமிக்க வீரனைப் போல
வாழ்ந்திட கனவே!!!
வீரத்தையும், ரத்த வேகத்தையும் ஏழுப்பிடுமே நம் முன்றாம் கனவு
எட்டு வயதில், கல்வி சுவையை சுவைத்திட கனவே!!!
அறிவு என்னும் அழியா துணையை வளர்க உதவிடுமே நம் நான்காம் கனவு!!
ஒன்பது வயதில், ஒழுக்கமாக வாழ்ந்திட கனவே!!!
உயிரின் மேலான ஒழுக்கத்தை ஊட்டிடுமே நம் ஐந்தாம் கனவு
பத்து வயதில், பயமின்றி அனைத்தையும்
வென்றிட கனவே!!!
பயத்தையும் தயக்கத்தையும் முறுத்திட உதவிடுமே நம் ஆறாம் கனவு
பதினொறு வயதில், பட்டங்கள் பதவிகள் பெற்றிட கனவே!!!
உயர்த்தை நோக்கி ஓடிட செய்யுமே நம் ஏழாம் கனவு
பனிரெண்டு வயதில் ,பொய்கள் கூறாமல்
வாழ்ந்திட கனவே!!!
வாய்மையை வளர்திடுமே நம் எட்டாம் கனவு...
பதிமூன்று வயதில், சவால்களை வென்றிட கனவே!!!
வெற்றியை பாதைக்கு வழி செய்திடுமே நம் ஒன்பதாம் கனவு
பதினாக்கு வயதில், புதிதாக கலைகளை கற்றிட கனவே!!!
கற்றலின் தேவையை உணர்திடுமே நம் பத்தாம் கனவு!!!
பதினைத்து வயதில், தோல்வியை வென்றிட கனவே!!!
முயற்ச்சி ஊக்க வைத்திடுமே நம் பதினொன்றாம் கனவு
பதினாறு வயதில், முதல் காதலில் வென்றிட கனவே!!!
இளம்பருவத்தின் சுகத்தை உணர்திடுமே நம் பனிரெண்டாம் கனவு
பதினெழு வயதில் அவமானங்களை புகழாக மாற்றிட கனவே!!
வாழ்க்கையின் சித்துகளை புரிய வைத்திடுமே நம் பதிமூன்றாம் கனவு..
பதினெட்டு வயதில் நிலையான லட்சியத்தை நோக்கி ஒடிட கனவே!!
வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி ஒட வைத்திடுமே நம் பதினாக்காம் கனவு
நம் வாழ்வில் ,கனவுகள் ஓர் அங்கமாகவே
தொடர்கின்றன!
அதில் சில நிஜமாகலாம், பல கனவுலாகவே மறைகின்றன...
,அதிசியத்தையும், அனுபவத்தையும் ஒருசேர தந்திடும் கனவு என்றும் அழியாத
அழகு தான்!!!!