அறிவின் ஊற்று
அறிவின் ஊற்று
நான் கேள்வி பட்டதோ ஆறறிவு ஆனால்
உனது பல்லாயிரக்கணக்கான அறிவைக் கண்டு பிரமித்து போகிறேன்....
கல்வி முதல் கண்டுபிடிப்புகள் வரை..
கவிதை முதல் காவியம் வரை..
கண்ணெட்டும் தூரம் வரை வைத்திருக்கிறாய் கல்லாதவரின் கல்வியறிவை..
உன்னை யார் தொட்டாலும்
பூ மலர்ந்து தேன் சிந்துவது போல
நீ மலர்ந்து அறிவை தருகிறாய்
அறிவுக் களஞ்சியமே நான் காதலிக்கும்.....
என் புத்தகமே!!
நான் உன்னோடு இருந்த ஒவ்வொரு வினாடியும் அறிவையும் மன வலிமையும் தந்ததற்கு நன்றி....