STORYMIRROR

Renitha Jabamani

Romance Inspirational

4  

Renitha Jabamani

Romance Inspirational

அன்பு தோற்பதில்லை !!

அன்பு தோற்பதில்லை !!

1 min
109

அன்பு தோற்றுவிட்டது

என எப்படி சொல்லுகிறீர்கள் ?

தான் நேசித்தவளை

மணக்கவும் முடியாமல்

மறக்கவும் முடியாமல்

கருவுற்றவளைப் போல

தன்னுள்ளே சுமந்து கொண்டு

தனக்கான பாதையில்

முன்னேறி செல்கிறான் ஒருவன்.... 

அங்கே அன்பு தோற்கவில்லை

வாழ்ந்து கொண்டிருக்கிறது,

தான் நேசித்தவன் இறந்த பிறகும் 

அவன் அணைப்பையும், 

வார்த்தைகளையும் - தன் 

வாழ்க்கையாக்கிக்கொண்டு,

நெஞ்சிலே பாரத்தோடு 

தன்னை சுற்றியுள்ள 

உறவுகளின் நிம்மதிக்காக

சிரித்துக் கொண்டு – அவனை 

சிந்தையில் சுமந்து கொண்டு 

நாட்களை யுகங்களாகக்

கடக்கிறாள்......

எங்கே தோற்றுப் போனது அன்பு 

(காதல்) வாழ்ந்து கொண்டுதான்

இருக்கிறது....

இன்னும் வாழ்ந்து கொண்டுதான் 

இருக்கும்.....

எனவே ஒருபோதும் சொல்லாதீர்கள்

அன்பு ( காதல்) தோற்றுவிட்டது

என்று.....


Rate this content
Log in

Similar tamil poem from Romance