அன்பு தோற்பதில்லை !!
அன்பு தோற்பதில்லை !!
அன்பு தோற்றுவிட்டது
என எப்படி சொல்லுகிறீர்கள் ?
தான் நேசித்தவளை
மணக்கவும் முடியாமல்
மறக்கவும் முடியாமல்
கருவுற்றவளைப் போல
தன்னுள்ளே சுமந்து கொண்டு
தனக்கான பாதையில்
முன்னேறி செல்கிறான் ஒருவன்....
அங்கே அன்பு தோற்கவில்லை
வாழ்ந்து கொண்டிருக்கிறது,
தான் நேசித்தவன் இறந்த பிறகும்
அவன் அணைப்பையும்,
வார்த்தைகளையும் - தன்
வாழ்க்கையாக்கிக்கொண்டு,
நெஞ்சிலே பாரத்தோடு
தன்னை சுற்றியுள்ள
உறவுகளின் நிம்மதிக்காக
சிரித்துக் கொண்டு – அவனை
சிந்தையில் சுமந்து கொண்டு
நாட்களை யுகங்களாகக்
கடக்கிறாள்......
எங்கே தோற்றுப் போனது அன்பு
(காதல்) வாழ்ந்து கொண்டுதான்
இருக்கிறது....
இன்னும் வாழ்ந்து கொண்டுதான்
இருக்கும்.....
எனவே ஒருபோதும் சொல்லாதீர்கள்
அன்பு ( காதல்) தோற்றுவிட்டது
என்று.....

