ஆறு
ஆறு
ஆறு கடக்க எண்ணி
ஆறுமுகம் போகையிலே
ஆறு படகில் வந்த
ஆறு கன்னியர் முகம் பார்க்க
ஆறு ஆகி ஓடிய கண்ணீர்
ஆறு போன திக்கினில் கலக்க
ஆறுமுகம் பதைத்து
ஆறு முறை என்னவென்று கேட்க
ஆறு ரத்தினமான மீன்வலை
ஆறோடு போன கதை
ஆறுமுகத்திடம் பகர்ந்திடவே
ஆறுமுறை ஆறினுள் குதித்து
ஆறுமுகம் தேடிடவே
ஆறினுள் இருந்து
ஆறுமுகம் சின்னஞ்சிறிய சொப்பு
ஆறு மீன்வலை கொணரவே
ஆறு கன்னியரின் குழந்தை விளையாட்டுகண்டு
ஆறுமுகம் மனம் வருந்தியதே!