ஆண்டவன் கட்டளை
ஆண்டவன் கட்டளை
ஏன் பிறந்தோம்
எதற்காக பிறந்தோம்
யாருக்காக வாழ்கிறோம்
என்ற அடுக்கடுக்கான வினாக்களுக்கு
அர்த்தம் தெரியாமலே
அர்த்தமில்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
கால ஓட்டத்திற்கு ஏற்பநமது நற்பண்புகள் எல்லாம் காலால் மிதிபட்டு
கடைக்கோடி குப்பைத்தொட்டியில் வீசப்படுகிறது
ஆனாலும் வாழ்கின்றோம் அமைதியாக
ஆண்டவன் கட்டளை என்று