விதியின் விளையாட்டு
விதியின் விளையாட்டு
காவியா ஒரு நாள் வீட்டில் தனியாக இருந்தாள். அப்போது அவளுக்கு வயது 18 ஆகும். அப்போது வெளியூர் வேலையாக அவளின் அப்பா அம்மா இருவரும் சென்றனர். வரும் வழியில் எதிர்பாராத விதமாக ஒரு விபத்து ஏற்பட்டது அதில் இருவரின் உயிரும் பறிபோனது. அவள் தினமும் அழுது கொண்டே இருப்பாள். ஒரு நாள் கடவுளிடம் ஏன் என்னை அனாதையாக தவிக்க விட்டாய்? என் உயிரையும் எடுத்து கொள்ளலாம் என்று அவள் கத்தினாள். இரவு உறங்கும் வேளையில் அவள் கண் முன்னே ஒரு வெளிச்சம் வந்தது. அதில் ஒரு உருவம் தோன்றியது அத கடவுளாக எண்ணினாள். அவர் உனக்கு ஒரு வரம் அளிக்கிறேன்.கேள் என்றார். அதற்கு அவள் எனக்கு வரம் ஏதும் வேண்டாம். என் அப்பா அம்மா இருவரையுமே எனக்கு கொடு அது போதும் என்றாள். அதற்கு கடவுளோ இல்லை அது சாத்தியம் இல்லை அது முடிந்த கணக்கு மீண்டும் வர இயலாது அது மட்டுமல்ல நீ உன் இறுதி மூச்சு இருக்கும் வரை நீ தனிமையில் தான் வாழ வேண்டும். இதுவே உன் விதி என்றார்.
ஆகையால் உனக்கு நான் உனக்கு பிடித்த ஆசையை நிறைவேற்ற போகிறேன். கூறு என்றார்.அதற்கு அவளோ கூறுகிறேன் இந்த வாழ்க்கை எனக்கு பிடிக்க வில்லை ஆகையால் நான் பூக்களுக்கே அரசியாய் தேவதையாக மாற வேண்டும் என்றால் அதற்கு கடவுள் இந்த வார்த்தை உனக்கு நான் அளிக்கிறேன். ஆனால் இதில் சில நிபந்தனைகளை பின்பற்ற வேண்டும். நீ ஐந்து வருடங்கள் தேவதையாகவும் ஒரு வருடம் காற்றாய் மறைவாய் என்றார். இதுவே உன் வாழ்க்கை சுழற்சி என்றார். முக்கியமாக நீ இங்கே தனிமையில் இருக்க வேண்டும் உனக்கென்று ஒரு துணை தேடினால் உன் உயிர் உடலை நீங்கும் என்றார். அதற்கு அவளும் ஒப்புக்கொள்கிறாள். அந்த ஆசை வரமாக நிறைவேறியது. அவளும் அந்த வாழ்க்கையை சிறப்பாக வாழ்ந்து வந்தாள். அப்போது ஒரு நாள் அவள் குளத்தில் குளித்து கொன்டு இருந்தாள். அப்போது சத்தம் கேட்டு ஒரு வேடன் வந்தான். அங்கு இருந்த மரத்தின் பின்பு ஒளிந்து கொண்டான். பிறகு அவள் குளித்து விட்டு மேலே வந்தாள். அவள் வந்ததும் ஒரு தென்றல் காற்று வீசியது அதிலே பட்டுப் பூக்களும் வண்ண மலர்களும் பறந்து வந்து ஆடையாக மாறி அவளின் மேனியை மூடியது. அந்த வேடனோ யார் அவள் வித்தியாசமாக இருக்கிறாளே என்று கூறி கொண்டு அவளை பின் தொடர்ந்தான். ஒரு கட்டத்தில் அவளுக்கு தெரிய வந்தது நம்மை யாரோ பின் தொடர்கிறார் என்று நினைத்து ஓடி மறைந்து விட்டாள்.. ஒரு நாள் அவளை மீண்டும் பார்த்தான் அன்று அவள் நீ யார் என்னை நீ ஏன் பின் தொடர்கிறார் என்று கேட்டாள். அதற்கு அவன் நான் வேடன் நீ இந்த மானுடத்தின் இவ்வளவு அழகான பெண்ணை கண்டதில்லை ஆகையால் பின் தொடர்ந்தேன் என்றான் நீ யார் என்று அவளை பார்த்து கேட்டான். அதற்கு அவள் அனைத்தையும் கூறி விட்டாள். சிறிது காலம் கழித்து அவளை மணக்க விரும்பினான். அவளிடம் கூறினான். உனக்கு எப்படி இந்த எண்ணம் தோன்றியது. நான் யார் என்ற முழுவதையும் கூறி விட்டேன் அப்படி இருக்கையில் எப்படி உனக்கு இந்த எண்ணம் தோன்றியது. எனக்கு ஆசை அன்பு காதல் காமம் என எதுவும் இல்லை என்று கூறினாள். ஆனால் அவன் செவியில் எட்ட வில்லை. பிறகு அவனை திட்டி காட்டை விட்டு போக சொன்னாள். அவனும் சென்று விட்டான். சிறிது காலம் கழித்து வீரர்கள் அவளை சிறை பிடித்து அரண்மனைக்கு அழைத்து வந்தனர். அங்கு வேடனாக இருந்தவன் இளவரசனாக அமர்ந்து இருந்தான். அவள் மிகவும் ஆச்சர்யத்துடன் அவனிடம் நீ யார் என்று கேட்டால். அதற்கு அரசன் பதில் அளித்தார். அவன் யார் என்று கூறினார். அவரோ இந்த நாட்டின் இளவரசன். உன்னை கண்டதில் இருந்து அவன் அவனாகவே இல்லை. உங்கள் இருவரையும் சேர்த்து வைக்கவே உன்னை அழைத்து வர கூறினேன். உன்னை பற்றி நான் அறிவேன் என்று அவர்களுக்கு திருமணம் செய்து வைத்தார். பிறகு அவளோ என்னுடைய இல்லற வாழ்வு காட்டில் தான் நடக்கும் என்று அவனை காட்டிற்கே கூட்டி சென்றாள். அங்கு இருவரும் சேர்ந்தனர். உடனே அவனுக்கு உடல் நிலை மிகவும் மோசமாக இருந்தது. வைத்தியரை அணுகினாள். இவனை காப்பாற்ற முடியாது என்று கூறி விட்டார். பிறகு அங்கு வந்த முனிவர் ஒருவர் உன் கணவனின் உயிர் எமனின் எல்லைக்கு சென்றது. அவனை காப்பாற்ற எமனின் காலடி விழு என்றார். பிறகு அவர் உன் கணவனுக்கு ஒரு பத்தினி விட்ட சாபம் தான். அவன் இல்லற வாழ்வில் மனைவி விட்டு விட்டு வேறு ஒரு பெண்ணுடன் உறவு கொண்டார் ஆகையால் அவளின் மனைவி விட்ட சாபம் இப்போது பழித்து உள்ளது. விரைந்து செல் எமனின் காலடி செல் என்றார். இவளும் எமனின் கோட்டையை நோக்கி சென்று எமனை அடைந்தாள். அங்கு சென்று என் கணவனை விட்டு விடுங்கள் என்றார். அதற்கு எமன் இல்லை இவன் கணக்கு சிறிது நேரத்தில் முடிய போகிறது அவனை மீட்க முடியாது அது மட்டுமல்ல எனக்கு உயிரை எடுக்க தான் முடியும் காப்பாற்ற அல்ல என்றார். பிறகு இவள் உயிரை தருகிறேன் என் கணவனை விட்டு விடுங்கள் என்று கூறி விட்டு உடனே அவள் உயிரை மாய்த்துக் கொண்டாள். அவன் கணவன் குணமாகி அரண்மனை திரும்பினார். நடந்ததை அரசரிடம் கூறினார். அங்கு வந்த முனிவர் அவளின் விதியை கூறினார். அவளுக்கு தனிமை எனும் வார்த்தை அளித்தார். துணை தேடினால் உயிர் பிரியும் என்று அவளுக்கு அளிக்கப்பட்ட சாபம். இன்று அவள் துணை தேடினால் சாபத்தை அனுபவிக்கிறாள்.அதற்கு அவன் இல்லை தவறு என் மேலே தான் அவளை விரும்பினேன். அவள் மேல் தவறு இல்லை என்று அழுதான். அதற்கு அந்த முனிவர் இது தான் விதியின் விளையாட்டு என்றார். இதை யாராலும் வெல்ல முடியாது.
நன்றி!

