Rajamanisha Palraj

Drama Inspirational

4.2  

Rajamanisha Palraj

Drama Inspirational

ஒரு அன்பான இதயம் ❤️

ஒரு அன்பான இதயம் ❤️

6 mins
714


ஒரு அன்பான இதயம் ❤️

 நான் அர்ஜுன், சிவில் இன்ஜினியர், இளம், அழகான மற்றும் வெற்றிகரமான வணிக மனிதன். நான் எல்லோரையும் விட என் அம்மாவை அதிகம் நேசிக்கிறேன். அம்மா பையன். நான் வழக்கமாக அதிகாலை 5 மணிக்கு எழுந்து, ஜிம்மில் ஒர்க்அவுட் செய்வேன். பின்னர் அலுவலகம் மற்றும் அலுவலகத்திலுருந்து வீடு. இது எனது அன்றாட வழக்கம். கொஞ்சம் சலிப்பா இருக்கா? இருக்கலாம். ஆனால் நான் எனது பெரும்பாலான நேரத்தை எனது அலுவலகத்தில் தான் செலவு செய்வேன். வியாபாரத்தில் உயர் மட்டத்தை அடைய வேண்டும் என்பது கனவு.


 ஒரு நாள், வழக்கம் போல அலுவலகத்திற்கு நான் தயாராகிக்கொண்டிருந்தேன். அம்மா தயாரித்த சுவையான காலை உணவை உட்கொண்ட பிறகு, நான் கிளம்பினேன். ஒரு முக்கியமான சந்திப்பு இருந்தது, ஆனால் அதிக போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டேன். நான் எனது மேனேஜரை அழைக்க முயற்சித்தேன், திடீரென்று யாரோ ஒருவர் கதவைத் தட்டினார். நான் திரும்பினேன், ஒரு பெண் பலூன்கள் மற்றும் பேனாக்களை விற்க முயன்றாள். அவருடன் ஒரு சிறு பையனும் இருந்தான். அவனுக்கு 4 அல்லது 5 வயது இருக்கலாம். அவனது சட்டை கிழிந்து, அழுக்காக இருந்தது, ஆனால் அவன் முகத்தில் ஒரு பிரகாசமான புன்னகை இருந்தது. சில பீஸ்ஸா டெலிவரி சிறுவர்கள் என் காருக்கு முன்னால் நின்று கொண்டிருந்தனர். அந்த சிறுவன் அவர்களை அம்மாவிடம் காட்டி பீட்சாவைக் கேட்டான். அவனது அம்மா ஏதோ சொன்னார், அவன் ஏதும் கேட்காமல் அவர் கைகளைப் பிடித்துக் கொண்டு சென்றான், ஆனால் அவன் கண்கள் இன்னும் பீஸ்ஸாக்களிலே இருந்தன.


 நான் வருத்தப்பட்டேன். நான் அலுவலகத்தை அடைந்தேன், பின்னர் கூட்டம் தொடங்கப்பட்டது. இது எனது புதிய மல்டிபிளக்ஸ் திட்டத்தைப் பற்றியது. மேனேஜர் கூறினார் “என் மனதில் ஒரு இடம் இருக்கிறது, ஒரு முறை வந்து பாருங்கள். உங்கள் உறுதிப்படுத்தலுக்குப் பிறகு, நாம் மேலும் தொடரலாம் ”. எனது தற்போதைய திட்டங்களில் நான் பிஸியாக இருந்தேன், எனவே எனக்கு நேரம் கிடைக்கும் போது சென்று அந்த இடத்தை சரிபார்க்கிறேன், என்றேன்.


 வீடு திரும்பும் போது திடீரென்று ஒரு எண்ணம் என் மனதில் வந்தது. நான் ஏன் அந்த சிறுவனுக்காக பீஸ்ஸாவை வாங்கிக் கொடுக்க கூடாது? அவனுக்காக பீஸ்ஸா வாங்க முடிவு செய்தேன். அடுத்த நாள் காலை, நான் ஒரு பீட்சாவை ஆர்டர் செய்தேன், அதைப் பெற்ற பிறகு நான் வீட்டிலிருந்து கிளம்பினேன். நான் அந்த நெரிசலான போக்குவரத்து பகுதியை அடைந்தேன், ஆனால் அம்மாவையும் மகனையும் கண்டுபிடிக்க முடியவில்லை. இன்றைக்கு நான் அவனுக்கு பீட்சா கொடுத்தே ஆக வேண்டும் என்று முடிவெடுத்தேன். எனவே அவரைத் தேட நான் சாலையின் மறுபுறம் சென்றேன். அவன் ஒரு சிறிய நாய்க்குட்டியோடு மூலையில் விளையாடி கொண்டிருந்தான். அவனிடம் ஒரு சிறிய பாக்கெட் பிஸ்கட் இருந்தது. அதையும் அவன் அந்த நாய்க்குட்டியுடன் பகிர்ந்து கொண்டிருந்தான். நான் அவனிடம் சென்று, “ஏய் குட்டி பையா, இது உனக்காக” என்றேன். ஆனால் அவன் அதை வாங்க மறுத்து விட்டான். அவன் சொன்னான் “நேற்று நான் என் அம்மாவிடம் பீட்சாவைக் கேட்டேன், அவள் சொன்னாள்“ இது பணக்காரர்களுக்காக உருவாக்கப்பட்டது, நமக்காக அல்ல. நாம் அதன் மேல் ஆசைப் படக்கூடாது” என்று. அதனால் இப்போது, நான் இதை விரும்பவில்லை ” எனக் கூறி அவன் தனது நாய்க்குட்டியுடன் அங்கிருந்து சென்று விட்டான்.


 பணக்காரர், ஏழை போன்ற சொற்களைப் புரிந்துகொள்ள கூட அவனுக்கு வயதில்லை. அது எனக்கு மிகவும் தொந்தரவாக இருந்தது. ஒரு வகையான குற்ற உணர்ச்சி என்று கூட சொல்லலாம்.. அவனிடம் பெரிதாக எதுவும் இல்லை, ஆனால் அவனால் அந்த நாய்க்குட்டிக்கு உணவளிக்க முடிந்தது. என்னிடம் ஏராளமான செல்வங்கள் இருந்தும் கூட என்னால் அந்தச் சிறுவனுக்கு உணவளிக்க முடியவில்லை. அன்றிரவு என்னால் தூங்க முடியாமல் மிகவும் கலக்கம் அடைந்தேன்.


 அம்மா என் அறைக்கு வந்து கேட்டார் “அர்ஜுன், நீ ஏன் இன்னும் விழித்திருக்கிறாய்? அனைத்தும் நலமா? என்ன நடந்தது?" நான் அவளிடம் எல்லாவற்றையும் சொன்னேன், அவள் சொன்னாள் “உன்னுடைய தவறு ஏதும் இல்லை கண்ணா, ஒருவேளை உன்னால் அந்தச் சிறுவனுக்கு உதவ முடியுமென்றால் உதவி செய். அது உனக்கு அமைதியைக் கொடுக்கக்கூடும் ”என கூறினார். என்னால் அதை உணர முடிந்தது. இந்த வயதில், அவனுக்கு கல்வி, ஆரோக்கியமான உணவு அவசியம். எனவே அவனுக்கு ஸ்பான்சர் செய்ய முடிவு செய்தேன். இது எனக்கு சற்று நிதானமாக இருந்தது, நான் தூங்கினேன்.


 அடுத்த நாள், நான் அந்த இடத்திற்கு சென்றபோது, அவனை அங்கே காண முடியவில்லை. நான் அவனை அங்கும் இங்கும் தேடினேன், ஆனால் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் எனது டிரைவரிடம் கேட்டேன், “இவர்களுக்கெல்லாம் எந்த நிரந்தர இடமும் இல்லை, அவர்கள் தங்கள் இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள்” என்றார். 2 – 3 நாள்கள் கழிந்தது, ஆனால் அவனைப் பார்க்க முடியவில்லை.


 அடுத்த நாள், அதே பையனும் அவனது தாயும் போக்குவரத்து சிக்னலில் இருந்தனர். அவன் காயமடைந்திருப்பதை உணர்ந்தேன். அவனது தலையில் சில கட்டுகள் இருந்தன, அவன் கையில் சிறிது ரொட்டி இருந்தது. நான் பதறிப் போனேன். அவர்களை நோக்கி ஓடினேன். நான் அவனது அம்மாவிடம், “அவனுக்கு என்ன நேர்ந்தது?” என்று கேட்டேன். அவர் கூறினார் “அவன் ஒரு நாய்க்குட்டியுடன் விளையாடிக் கொண்டிருந்தான் துரதிர்ஷ்டவசமாக நாய்க்குட்டி இரு சக்கர வாகனத்தின் நடுவில் மாட்டி இறந்து விட்டது. அந்த நாய்க்குட்டியைக் காப்பாற்ற முயன்ற போது இவனுக்கும் அடி பட்டு விட்டது. இன்று தான் நாங்கள் அரசு மருத்துவமனையில் இருந்து திரும்பினோம் ”. நான் இனியும் தாமதிக்க விரும்பவில்லை, அதனால் நான் அவனது அம்மாவிடம் “அவனுக்கு நல்ல கல்வியையும் பிற வசதிகளையும் கொடுக்க விரும்புகிறேன். நான் அவனுக்கு நிதியுதவி செய்யத் தயாராக இருக்கிறேன், அது உங்களுக்கு சம்மதமா? ” என் வாக்கியத்தை நான் முடிப்பதற்கு முன்னரே அவர் கத்த ஆரம்பித்து விட்டார். அவர் உங்களுக்கு எவ்வளவு தைரியம்? எத்தனை பேர் இப்படி கிளம்பி இருக்கிறீர்கள்? இப்படி இனிமையான சொற்களை பேசி, நீங்கள் என் குழந்தையை கடத்த விரும்புகிறீர்களா? எனக்கு எதுவும் புரியவில்லை. அதன் பிறகு தான் இரண்டு நாட்களுக்கு முன்பு யாரோ அவர்களிடம் இதுபோன்று சென்று இனிமையாக பேசி அவர் குழந்தையை கடத்த முயன்றதை நான் அறிந்தேன். அவனை மீட்க போராடிய போது தான் அவனுக்கு காயம் பட்டது மற்றும் அவனது நாய்க்குட்டியும் இறந்து போனது. நான் மிகவும் வருத்தப்பட்டேன். மேலும் அவரது அம்மா என் முன்னால் கைகளை கூப்பி, “நான் இங்கே அவனுக்காக மட்டுமே உயிருடன் இருக்கிறேன், அவன் இல்லாமல் என் வாழ்க்கையில் எந்த அர்த்தமும் இல்லை. நாங்கள் ஏழைகள், எங்களுக்கு ஏதாவது நடந்தால் நீதி கேட்கும் துணிவு கூட எங்களுக்கு கிடையாது, தயவுசெய்து எங்களை விட்டு விடுங்கள் ”என்று அழுதார். என் நோக்கம் தவறானது அல்ல, ஆனால் அவர் தவறாக புரிந்து கொண்டாள். நான் அமைதியாக அங்கிருந்து சென்று விட்டேன், ஆனால் அந்தச் சிறுவன் மட்டும் என்னை மீண்டும் மீண்டும் திரும்பிப் பார்த்துக் கொண்டிருந்தான்.


 என் இதயம் மிகவும் கனமாக இருந்தது. நான் எல்லாவற்றையும் அம்மாவிடம் சொன்னேன். அவள் என்னை ஆறுதல்படுத்த முயன்றாள், “அர்ஜுன் கவலைப்பட வேண்டாம், எதுவும் உன் கையில் இல்லை, நீ முயற்சித்தாய் அதுவே போதும். கடவுள் மீதமுள்ள விஷயங்களை கவனித்துக்கொள்வார் ”.

 அதன் பிறகு நான் இரண்டு வாரங்கள் பெங்களூருக்குச் சென்று விட்டேன், அது ஒரு உத்தியோகபூர்வ பயணம். நான் அங்கே சில வேலைகளை முடிக்க வேண்டியிருந்தது. வேலை முடிந்து மும்பை திரும்பிய பிறகு, நான் அலுவலகத்திற்கு வழக்கம் போல சென்று கொண்டிருந்தேன், போக்குவரத்து சிக்னலில் மறுபடியும் சிக்கிக்கொண்டேன். என் கண்கள் தானாகவே சிறுவனைத் தேட ஆரம்பித்தன, ஆனால் அவன் அங்கு இல்லை. திடீரென்று யாரோ என் கதவைத் தட்டினார், நான் திரும்பி பார்த்தேன். அது அவன்தான். அவன் பேனாக்களை வாங்கிக் கொள்ளுமாறு என்னிடம் கேட்டான். நான் சொன்னேன், எனக்கு பேனாக்கள் தேவையில்லை, ஆனால் இந்த பணத்தை நீ வைத்துக் கொள்ளலாம் என்று. அவன் அதை மறுத்து, “நீங்கள் எதையும் வாங்கவில்லை என்றால் எனக்கு பணம் கொடுக்க வேண்டாம்” என்றான். எனக்கு அவனை மிகவும் பிடித்து போனது. இந்த சிறு வயதிலும் கூட, அவன் கடின உழைப்பு இல்லாமல் பணத்தை விரும்பவில்லை. என் மனதில் அவன்முத்திரை பதித்தான்.


 நான் அவனது பெயரைக் கேட்டேன், அவன் “அகிலன்” என்றான். அவன் பதிலுக்கு என் பெயரைக் கேட்டான், நான் “அர்ஜுன்” என்றேன். எல்லா பேனாக்களையும் அவனிடமிருந்து வாங்கி கொண்டேன், நான் கொடுத்த பணத்தை வாங்கி கொண்டு அவன் அங்கிருந்து சென்றான்.


 அந்த நேரத்தில் என் காரின் பின்னால் ஒருவர் பேசுவதைப் கேட்டேன். பைக்கில் இருந்த ஒருவர், “நான்கு நாட்களுக்கு முன்பு, இந்த ஏழை சிறுவன் சாலை விபத்தில் தனது தாயை இழந்துவிட்டான். அந்த ஏழைப் பெண்ணுக்கு உதவ ஒருத்தர் கூட செல்லவில்லை. இப்போது, அவனே விற்பனை செய்யத் தொடங்கி விட்டான் ” என்றார். அதைக் கேட்டதும் என் இதயம் சுக்கு நூறாக நொருங்கி விட்டது. உடைந்து போனேன். சிறுவன் டிவைடரில் நின்று கொண்டிருந்தான், திரும்பிப் என்னைப் பார்த்து மெல்லமாக சிரித்தான். அந்த புன்னகை, “ஓ கடவுளே” அந்த புன்னகை வெளிப்படுத்தப்படாத ஆயிரம் உணர்ச்சிகளைக் கொண்டிருந்தது, அந்த புன்னகை அது வலிகளால் நிறைந்திருந்தது, நான் அதை உணர்ந்தேன். நான் எல்லாவற்றையும் விட்டுவிட்டு அவனை நோக்கி ஓடினேன். சாலையில் இருப்பதை கூட மறந்து அவனைக் கட்டிப் பிடித்து அழுதேன்.


 பின்னர், நான் அவனை என் காரில் அழைத்துக் கொண்டு அவன் வசிக்கும் இடம் பற்றி கேட்டேன், அவன் எனக்கு வழிகாட்டத் தொடங்கினான். நான் அவனிடம் கேட்டேன், “நான் உன்னை பள்ளி கூடத்தில் சேர்த்து விடுகிறேன், நான் உன்னை நன்றாக கவனித்துக்கொள்கிறேன், நீ என்னுடன் வருவாயா?” அவன் அமைதியாக இருந்தான். அவனது மௌனத்தை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

 நான் சொன்னேன், “முதலில் நான் உனக்காக சட்டை வாங்க வேண்டும்”. எனக்காக வாங்குவீர்களா? என்று உடனே கேட்டான். நிச்சயமாக வாங்குவேன் அகிலா என்றேன்.


 நாங்கள் கடைக்குச் சென்றோம், ஆனால் அவன் 2 சட்டைகளை மட்டுமே கேட்டான், அது அவனுடைய அளவு கூட‌ இல்லை. அவனது விருப்பப்படி நான் வாங்கினேன். நாங்கள் அவனுடைய இடத்தை அடைந்தோம், பல குழந்தைகள் என் காரைப் பார்த்து எங்களை நோக்கி ஓடி வந்தார்கள். சரியான பராமரிப்பு இல்லாமல் பல கூடாரங்கள் இருந்தன. அகிலன் தன்னுடன் இரண்டு சிறுவர்களை அழைத்து வந்து “அவர்களின் சட்டைகள் துளைகள் நிறைந்து மிகவும் கிழிந்திருக்கிறது. அர்ஜுன் நான் அவர்களுக்கு இந்த சட்டைகளை கொடுக்கலாமா? நீங்கள் எனக்கு கல்வியையும் வழங்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, தயவுசெய்து இந்த சட்டைகளை அவர்களுக்கு கொடுக்க என்னை அனுமதிக்கவும் ”. அது மிகவும் உணர்ச்சிகரமான தருணமாக இருந்தது.. பணக்காரனாக இருப்பதன் பயன் என்ன? எனக்கு அவனைப் போன்ற இதயம் இல்லையே. பணத்தால் எல்லாவற்றையும் வாங்க முடியும் என்று நான் எப்போதும் நினைத்தேன், ஆனால் ஒரு அன்பான இதயத்தின் முன் பணம் எதுவும் இல்லை.


 திடீரென்று, என் மேனேஜர் அங்கு வந்து “ஐயா, இதுதான் நான் பேசிக் கொண்டிருந்த இடம். நீங்கள் சரி என்று கூறினால், நாம் மேற்கொண்டு பணியைத்  தொடரலாம் ”. இந்த மக்கள் எங்கே செல்வார்கள்? என்று கேட்டேன். அவர் கூறினார், “இது அவர்களின் நிரந்தர இடம் அல்ல, அவர்களுக்கு நிரந்தர வேலை கூட இல்லை. எனவே அவர்கள் நம்மை தொந்தரவு செய்ய மாட்டார்கள். இதையெல்லாம் நான் கவனித்துக்கொள்கிறேன் ”. “எந்த மல்டிபிளக்ஸ் கட்டிடமும் இங்கு வராது‌ நான் முடிவு செய்து விட்டேன். அனைத்து கூடாரங்களையும் நீக்கி, அவர்களுக்கு சரியான வீடுகளை அமைத்துக் கொடுப்போம். நம்ம தொழிற்சாலையில் இங்கு உள்ள பெரியவர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதோடு, குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பிற அடிப்படை தேவைகளையும் செய்து கொடுப்போம். நாம் அவர்களை கவனித்துக் கொள்ள வேண்டும் ”என்றேன். அவர் கேட்டார், "ஆனால் ஐயா நாங்கள் இங்கே எந்த தொண்டு நிறுவனத்தையும் நடத்தவில்லையே?" கார்ப்பரேட் சமூக பொறுப்பு உங்களுக்குத் தெரியாதா? ” நான் கேள்வி எழுப்பினேன். என்னைப் பொறுத்தவரை “வெற்றிகரமான வாழ்க்கையை விட திருப்திகரமான வாழ்க்கை எப்போதும் சிறந்தது”. 2 நிமிட மொனத்திற்குப் பிறகு, அவர் என்னைப் பாராட்டினார். "நாம் இதை உடனடியாக தொடங்க வேண்டும்" என்று நான் முடித்தேன்.


 நான் அகிலனிடம் சென்று “அகிலா, நான் நாளை வருகிறேன்” என்றேன். அவர் என் கன்னத்தில் முத்தமிட்டு “பை அர்ஜுன் சீக்கிரம் வா” என்றான். நான் அங்கிருந்து கிளம்பும்போது, திரும்பி பார்த்தேன் அங்கிருந்த அத்தனை குழந்தைகளும் என்னைப் பார்த்து சிரித்தார்கள். அந்த புன்னகைகள், அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.


 நான் வீட்டிற்கு வந்ததும், என்னை என்னால் தடுக்க முடியவில்லை, எல்லாவற்றையும் என் அம்மாவிடம் சொன்னேன். அவள் என் நெற்றியில் முத்தமிட்டாள், அவள் கண்களில் மகிழ்ச்சியான கண்ணீர் துளிகள் நிறைந்து இருந்ததன. அவள் எதுவும் சொல்லவில்லை, ஆனால் எனக்கு எல்லாம் புரிந்தது. இவ்வளவு பெருமைப்பட்டு நான் என் அம்மாவைப் பார்த்ததில்லை, இதற்கு முன் இந்த மாதிரியான அமைதியையும் நான் உணர்ந்ததில்லை !!


 "எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்கிற இந்த உலகத்தில் அன்பானவனாக இருக்க முயற்சி செய். அன்பான இதயமே உன்னை செல்வந்தனாக காட்டும் !!"


Rate this content
Log in

Similar tamil story from Drama