Priya Virgo

Thriller

2.8  

Priya Virgo

Thriller

மறு ஜென்மம்

மறு ஜென்மம்

2 mins
1.1K


டும் டும் டமில் டுமில் என்று இடிசத்தம் கேட்டது. யாரும் இல்லாதஇடத்தில் ப்ளாட்போம் (platform) வழியாக வைத்தியசாலையில் தாதியாக பணிபுரியும் ஒரு பெண் பணிபுரிந்துவிட்டு வீட்டிற்குசென்றாள்.


ஏங்ஏங்ஏங் என்ற சிறு குழந்தையின் அழுகை சத்தம் கேட்டது. அவள் சுற்றி சுற்றி பார்த்தாள் யாருமே அங்கே இல்லை. இரவுநேரம் என்பதால் சற்று பயத்துடன் அடி எடுத்தாள் புறப்பட அடி எடுத்து வைக்கும் போது திரும்ப திரும்ப அழுகை சத்தம் கேட்கவும் கையடக்கத் தொலைபேசியில் உள்ள டோர்ச் லைட்டை ஆன் செய்து லைட் அடித்து பார்த்தாள்.


யாரோ ஓர் உருவம் மரத்திற்குப்பின்னே கீழே அமர்ந்து இருப்பது போல் தோற்றம் அளித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அருகில் சற்று தயக்கத்துடன் சென்று பார்க்கவும். ஒரு சிறு பெண் குழந்தை அழுக்கு மணத்துடனும் கிழிந்த ஆடையுடன் தலை விரிக்கோலத்தில் ஏங்கி ஏங்கி அழுந்துக்கொண்டிருந்தது. யார் பாப்பா நீ இங்கே இந்த இடி சத்தத்துடன் நடுங்கி கொண்டு இருக்கிறாய். 


அந்த குழந்தை கை அசைவுடன் நிலாவை காட்டி நான் நிலா என் தந்தையும் தாயும் இங்கே என்னை வேண்டாம் என்று விட்டுச்சென்றார்கள் என்றாள். உடனே அந்த பெண் என்னோடு வாராயா என் வீட்டிற்கு நான் உன்னை அழைத்துச் செல்கிறேன் என்றாள். நீங்கள் என்னை திரும்ப என் அப்பா, அம்மா போல் இங்கு விட்டுச்செல்வீர்களா? என்று நிலா கேட்க அந்த பெண் நான் உன்னை ஒரு போதும் விடமாட்டேன். 


நீ என்னை அம்மா என்று கூப்பிடுவாயா? நிலா சற்று புன்னகைத்தாள் அழுகையுடன். அந்த பெண் நிலாவை வீட்டிற்கு அழைத்து செல்ல அந்த பெண்ணின் கணவன் கதவை திறந்தான். வீட்டினுள்ளே சென்ற பின் அந்த பெண்ணின் கணவன் இந்த குழந்தை யார்?


நம் குழந்தை. நீ என்ன கூறுகிறாய் எனக்கொன்றும் புரியவில்லை?. அந்த பெண் நடந்தவற்றை எல்லாம் கூறி நமக்கும் 5 வருடங்களாக குழந்தை இல்லை அதுதாங்க நான்.....


அந்த பெண்ணின் கணவன் புன்னகைத்துக் கொண்டே வாடா செல்லம் வாடா இனி நாங்க தான் உன் அப்பா, அம்மா என்று கூறினான். அந்த பெண் குளியலறைக்கு நிலாவை கூட்டிக்கொண்டு போய் குளிக்க வைத்தாள். 


குளிக்க வைத்த பின் ஆடை ஒன்று இல்லாததால் ஒரு புது துணி எடுத்து ஊசியில் நூலைக்கோர்த்து கையால் ஆடைபோல் மூட்டிக்கொடுத்தாள். கண்ணு இன்று மட்டும் இந்த ஆடையை அணிந்து கொள் நாளை நான், உன் தந்தை, நீ மூன்று பேரும் ஆடை, விளையாட்டு பொருட்கள் எல்லாம் வாங்கி கொண்டு வருவோம் என்றாள்.


அந்த பெண்ணின் கணவன் ஆமாடா தங்கம் உன்னை ஏன் உன் அப்பா அம்மா விட்டுச்சென்றார்கள் என்று கேட்க நிலா கை அசைத்த படி கூறிய பதில் இவர்களுக்கு புரியவில்லை. 


அந்த பெண் உடனே ஒரு பேப்பரும் பென்சிலும் கொடுத்தாள் எழுத சொல்லி. நிலா எழுதியதும் இவர்கள் நிலா சிறுபிள்ளை என்பதால் எழுதிய எழுத்து கொஞ்சம் எழுத்து பிழைகளுடன் இருந்ததால் திக்கி திக்கி வாசித்து அதிர்ச்சி அடைந்தார்கள்.


                                                           தொடரும்...



Rate this content
Log in

Similar tamil story from Thriller