STORYMIRROR

Madhu Bala

Drama Crime Thriller

4  

Madhu Bala

Drama Crime Thriller

கடைசி பயணம்

கடைசி பயணம்

1 min
314

இங்கு வருவது கார்திக்கு இது எட்டாவது முறை இல்லை, ஒன்பதாவது முறை, இதில் கணக்கு தெரிவதில்லை. அழகால் அவனை கட்டிப்போட்டிருந்தது அந்த மலைகள், பச்சை மரங்கள், நடுவேயிந்த ஒரே வீடு. வீட்டின் கதவை திறந்ததும் நேரே கண் எட்டும் தூரத்தில் ஆர்ப்பரிக்கும் நதி. இது போதுமே ஒருவனை உயிர்ப்பிக்க. ஆனால் இது முதல் முறை பொது சுற்றுலா திட்டத்தில் முப்பது சுற்றுலா பயணிகளுடன் வருவது. இரண்டு பகல் சுற்றி பார்க்க, ஓரிரவு தங்கி ஊர் திரும்புவது திட்டம். நாள்முழுவதும் சுற்றியதால் அலுப்பில் சீக்கிரம் உறங்கச் சென்றான். இன்னும் சிலரும். காலை, ஏதோ அலறல் சப்தம் கேட்டது போல் இருந்தது, இப்போது தான் விடிந்தது போலிருந்தது. மணி ஒன்பது. அறையை விட்டு வெளியே வந்தான், இருவர் மட்டுமே அமர்ந்திருந்தனர்.


எல்லாரும் எங்கே?


சென்றுவிட்டனராம், நம்மை அழைக்க திரும்பி வருகிறார்களாம்.


அப்படின்னா அந்த நல்ல சாப்பாடிலிருந்து தப்பித்தோமா? என்று சொல்லி வாய்விட்டு சிரித்தான் கார்த்திக்.


இல்லை நமக்கு கட்டு சோராக எடுத்து வைத்திப்பார்கள். வாந்தவுடன் தந்திடுவார்கள். 


இதுவேரா?


மற்றொருவன் நிமிர கூட இல்லை.


நான் குளித்து வருகிறேன் என்று சென்றான்.


குளித்து கொண்டிருந்தான் 


 யாரோ அலறும் சப்தம். கேட்டது போல் இருந்தது.


முன் அறையை அடைந்தான்.


இப்போது அந்த மௌன‌ ஆசாமி மட்டுமே அமர்ந்திருந்தான்.


கார்த்திக் முகத்தில் புன்னகையுடன் கேட்டான் எங்கே அவர், வேன் வந்துவிட்டதா? எங்கே அவர் சாப்பாடு பார்சல் வந்துவிட்டதா அவருக்கு, மாட்டி கொண்டாரா? ஹா ஹா ஹா ஆனந்தமான சிரிப்பு.


திடீரென ஏதோ விழுந்தது சப்தம், கார்த்திக் பின்புறம் திரும்பி பார்த்தான்.


இது துளியும் எதிர்பாராத காட்சி.


தூக்கில் தொங்கி கொண்டிருந்த பிணம் கீழே விழுந்தது. அது கார்த்திக்கிடம் முதலில் பேசிய ஆசாமி.


தீர்க்கமாக நின்று கொண்டிந்த கால்கள் நடுங்கின, உடல் விரைத்து, திரும்பி அந்த மௌன ஆசாமியை பார்க்க பயமாய் இருந்தது.


அச்சத்துடன் திரும்பினான். 


சடார்.


முகத்தில் ஏதோ திரவம்.


ஏதோ செய்கிறது.


ஆஆஆஆ, எரிகிறது அமிலத்தின் வேதனை முகத்தில் தாளாமல் தரையில் பிறல தோடங்கினான்.


கணீரென்ற அந்த மௌன ஆசாமியின் குரல்.


மாட்டி கொண்டது அவனில்லை. நீ.



Rate this content
Log in

Similar tamil story from Drama